மதிப்பெண் குறைந்த மாணவர்களை சேர்க்கவில்லை என்றால் கடும் நாடவடிக்கை – கோவை ஆட்சியர் எச்சரிக்கை
கோவை, ஜூன் 2- கோவையில் அரசு பள்ளி மாண வர்களுக்கு கல்வியாண்டுக்கான பள்ளி புத்தகங்கள் வழங்கும் விழா வில் பேசிய கோவை மாவட்ட ஆட்சி யர், தனியார் பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை சேர்க்க வில்லை என்றால் கடும் நாடவடிக்கை எடுக்கப்படும் என் றார். கோடை விடுமுறை முடிந்து தமி ழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கள், தனியார் பள்ளிகள் திறக்கப்பட் டது. முதல் நாளான திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2025 - 26 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள், உப கரணங்கள் வழங்கப்பட்டது. இதில், கோவை, ராஜாவீதியில் துணிவணிகர் சங்க அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி களுக்கான பாடபுத்தகங்கள் வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கா. கிரியப்பனவர் தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணை யாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள், பை, கல்வி உப கரணங்களை வழங்கினர். முன்ன தாக பள்ளியில் உள்ள வகுப்பறை களுக்கு சென்று ஆட்சியர், நாடா ளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் மாணவிகளுடன் கலந்துறையாடி னர். தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட் சியர் பவன்குமார் கூறியதாவது, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 1,387 அரசு பள்ளிகளில் உள்ள சுமார் 2 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட புத் தகங்கள், பை மற்றும் கல்வி உபக ரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும் முதல் நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகளை தலைமை ஆசிரி யர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக மாக வரவேற்றனர். மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிக ரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள் ளது. ஜூன் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தனியார் பள்ளிக ளில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை சேர்க்க வில்லை என்றால் கடும் நாடவடிக்கை எடுக் கப்படும், குறிப்பாக பிரச்சனை உள்ள பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தப் படும், என்றார். ஈரோடு இதேபோன்று ஈரோடு, நஞ் சப்பகவுண்டன் வலசு அரசு மேல் நிலைப் பள்ளியில் வீட்டுவசதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி மாணவ, மாணவியர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாடப் புத்தகங்களை வழங்கி, கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.