சாதிய பாகுபாடு காரணமாக அவதியுறும் பட்டியலின மாணவர்கள்
தருமபுரி, மார்ச் 22- உயர் நிலைப்பள்ளிகள் இருந் தும், சாதிய பாகுபாடு காரணமாக வெகு தூரம் சென்று பட்டியலின மாணவர்கள் பயிலும் அவலம் இருப்பதால், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதற்கு ஒரு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொது மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத் திற்குட்பட்ட கம்பைநல்லூரில் கடந்த 1996 ஆம் ஆண்டு அரசு நடுநிலைப் பள்ளி தொடங்கப் பட்டது. பின்பு 1998 ஆம் ஆண்டு தரம் உயர்த்தி உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2025 மார்ச் 12 ஆம் தேதியன்று மாலை அளவில் பெய்த கனமழையின் கார ணமாக மூன்று வகுப்பறைகளில் மேற்கூறை பெயர்ந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் பள்ளி மாணவர்கள் யாருக்கும் எந்தவித உயிர் சேத மும் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், மாணவர்கள் மத்தியிலும் பெற் றோர்களின் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊர் பொதுமக்களுக்கும் மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள் ளன. அதில் பயின்ற மூன்று வகுப்பு மாணவர்களும் தற்போது ஒரே வகுப்பறையில் பயிலும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர் களின் நலனுக்காக கம்பைநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடு தல் கட்டிடம் கட்டிட அப்பணியை விரைந்து செயல்படுத்த வேண் டும். மேலும், இப்பகுதியில் சாதி பாகுபாடு அதிகம் நிறைந்த பகுதி ஆகும். சாதியின் காரணமாக அரசு உயர்நிலை பள்ளி 6 முதல் 8 வரை வகுப்புகள் பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் செயல்படுகிறது. இங்கு அனைத்து சமூக மாணவர் களும் படிக்கின்றனர். ஆனால், உயர்ந்த வகுப்பை சேர்ந்த மக்கள் வாழும் பகுதியில் 9 முதல் 10 வகுப்பு வரை செயல்படுகிறது. அங்கு அந்த ஊரில் உள்ள பள்ளியில் அந்த ஊர் மாணவர்களே படிக்காமல் அடுத்த ஊரில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெலவள்ளி பள்ளியில் சென்று படிக்கின்றனர். இது சுமார் 25 வருடங்களாக தொடர்ச்சியாக நடக்கிறது. எங்கள் பிள்ளைகள் அடுத்த ஊரில் போய் படிக்கட்டும் ஆனால் காலனிக்கு எங்கள் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் எங்கள் ஊரில் இயங் கும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கட்டி டம் மற்றும் உபகரணங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்கின்றனர். இந்த பிரச்சினையில் 2 கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டு இடங்களிலும் செயல் படுகிறது. இது சம்பந்தமாக மனு கொடுத்தாலும் எந்தவித பயனும் இல்லை. எனவே இந்த பள்ளி யினை ஒரே இடத்தில் செயல்பட நட வடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு கொடுக்கும் இயக் கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ. குமார், மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா, கட்சி நிர்வாகிகள் ஆனஸ்ட் ராஜ், மாதேஷ் மற்றும் ஊர் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.