tamilnadu

img

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

 திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளியன்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. புன்செய் புளியம்பட்டியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பி.ராஜு தலைமை வகித்தார். இதில் பி.என்.ராஜேந்திரன், பி.ஜெகநாதன், வ.செந்தில்குமார், நட ராஜ், சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். கடம்பூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இடைக் கமிட்டி செயலாளர் சி.சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செற் குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, கே. மாரப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சடையப்பன் மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். அதேபோல், அந்தியூரில் அரசு மருத்து வமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ஆர்.விஜயராகவன், தாலுகா செயலா ளர் ஆர்.முருகேசன், ஆர்.மணிகண் டன், ஆர்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட் டத்தின் நிறைவில், புளியம்பட்டி பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் எஸ்.கீதா நன்றி யுரை வழங்கினார். நாமக்கல் ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதாவால், இந்திய அரசியலமைப்பு சட்டம் சிதைந்து போகும். இஸ்லாமி யர்களின் உரிமைகள் பறிக்கப்படும். எனவே, இச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி வெள்ளி யன்று நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஜாமிஆ மஸ்ஜித் முன்பு இஸ்லாமியர்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் கருப்பு பேட்ச் அணிந்தபடி கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மஸ் ஜித் தலைவர் குலோப்ஜான் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.