tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஏப்.2இல் உண்ணாவிரதம்: விசைத்தறியாளர்கள் அறிவிப்பு

கூலி உயர்வுக்கு தீர்வு காணக் கோரி, ஏப்ரல் 2-ஆம்  தேதி விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கோவை - திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும்  விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம்  வியாழனன்று தெக்கலூரில் நடைபெற்றது. சங்கத் தலை வர் முத்துசாமி தலைமை தாங்கினார். இதில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து குறைக் கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். இனிமேல் கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். சட்ட பாதுகாப்பு டன் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட, ஜவுளி உற்பத்தியா ளர்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆண்டுக்கு ஆறு சதவீதம் மின் கட்டண  உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  உடனடியாக நிறைவேற்றக் கோரி, விசைத்தறியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விசைத்தறியாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், ஏப்ரல் 2-ஆம் தேதி அவி நாசியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடு வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறியா ளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

தருமபுரி, மார்ச் 28- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அப் பகுதியிலுள்ள பள்ளியில் 8  ஆம் வகுப்பு படித்து வந்தார். பாலக்கோடு அருகே கோடி யூர் கிராமத்தைச் சேர்ந்த கட் டிட மேஸ்திரியான ராம மூர்த்தி (22) என்பவர், சிறுமி யின் வீட்டின் அருகே கட்டிட வேலை செய்ய சென்ற போது, சிறுமியிடம் பழகி கடந்த ஆகஸ்ட் மாதம் பாலி யல் வன்கொடுமை செய்துள் ளார். ராமமூர்த்தியின் நடவ டிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர், எச்சரித்துள்ள னர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லும் சிறுமியை பின்  தொடர்ந்து சென்று தனியாக பேச அழைத்துள்ளார். சிறுமி வராததால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பாலக் கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் போலீ சார் ராமமூர்த்தியை கைது  செய்து சிறையில் அடைத்த னர்