tamilnadu

img

நிதி மசோதா சட்ட திருத்தத்தைக் கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நிதி மசோதா சட்ட திருத்தத்தைக் கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்களை வஞ்சிக் கும் நிதி மசோதா சட்ட திருத் தத்தை, உடனடியாக திரும் பப்பெற வேண்டும் என வலி யுறுத்தி, ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியர்களை வஞ்சிக் கும் வகையில் கொண்டு வரப் பட்ட நிதி மசோதா சட்ட திருத்தத்தை உடன டியாக திரும்பப்பெற வேண்டும். எட்டாவது  ஊதியக்குழுவின் பலன்களை வழங்குவ தில் பணியில் இருக்கும் ஊழியர்களையும், ஓய்வூதியர்களையும் சமமாக நடத்த வேண் டும் என வலியுறுத்தி, ஓய்வுபெற்ற மத்திய  அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்  பழைய பேருந்து நிலையம் தலைமை அஞ் சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கூட்டமைப்பின் நிர்வாகி எம்.மதியழ கன் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப் பின் நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் திர ளானோர் பங்கேற்றனர்.  திருப்பூர் திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஓய்வூ தியர் சங்க மாவட்டத் தலைவர் சௌந்தர பாண்டியன் தலைமை வகித்தார். இதில், ஓய்வூதியர் சங்க முன்னாள் மாநிலச் செய லாளர் நிசார் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங் கிணைப்புக்குழு மாவட்டத் தலைவர் டி. பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மண் டலச் செயலாளர் எம்.ரத்தினவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு மாவட்டத் தலைவர் ஆர்.முருகேசன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,  மாவட்டச் செயலாளர் பி.சின்னச்சாமி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கோவை  கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐபிடிபிஏ  என்.சிவசாமி தலைமை வகித்தார். ஓய்வூதி யர்களின் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பா ளர் நிசார் அகமது உள்ளிட்டோர் உரையாற்றி னர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகி களை அவமதித்த பெரம்பலூர் மாவட்ட ஆட் சியர் மற்றும் காவல்துறையினரின் நடவ டிக்கைகளை கண்டித்து அரசு ஊழியர் சங் கத்தினர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க நிர்வாகிகள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து மனு  கொடுக்க சென்றனர். அப்போது, கோரிக்கை  மனுவை கசக்கி எறிந்து, தொழிற்சங்க நிர் வாகிகளை அவமதித்து, பொய் புகார் அளித்து நிர்வாகிகளை கைது செய்ய வைத்த, ஆட்சியரின் சர்வாதிகார நடவ டிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மற்றும் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பெருந்திரளான அரசு ஊழியர்கள் பங் கேற்றனர்.