tamilnadu

img

சாலை விபத்தில் ஒருவர் பலி: 30 பேர் படுகாயம்

சாலை விபத்தில் ஒருவர் பலி: 30 பேர் படுகாயம்

உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி

காரிமங்கலம் அருகே தனியார் பேருந் தும், டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்த நிலையில், இளைஞர் ஒருவர் உயிரி ழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, தனி யார் பேருந்து ஒன்று தருமபுரி பேருந்து நிலை யம் நோக்கி வியாழனன்று வந்துக் கொண்டி ருந்தது. எதிர்திசையில் வடமாநிலத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. காரிமங்க லம் அருகே உள்ள பெரியாம்பட்டி பிரிவு சாலையில் தனியார் பேருந்து அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. பெரியாம்பட்டி ஊருக்குள் நுழையும்போது எதிரே வந்த டேங்கர் லாரியுடன் பக்கவாட்டில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சாலை அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாக னங்களில் வெளியூர் செல்வதற்காக இருந்த இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும், உயிரிழந்தது பி.கே.பள்ளம் பகுதியைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் சூர்யா (19) என்பது போலீசாரின் முதற்கட்ட விசார ணையில் தெரியவந்தது. இதேபோல் குரும் பர் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கு இரண்டு கால்களும் உடைந் தன. மேலும், பேருந்தை ஒட்டி வந்த ஓட்டு நர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காரிமங்க லம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு  தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிக் சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி

கோவை, ஏப்.18– மரபை காப்போம், பண் பாட்டை போற்றுவோம், வர லாற்றை மீட்போம் என்கிற முழக்கத்தோடு, கோவை யில் உலக மரபு நாள் விழிப் புணர்வு பேரணி வெள்ளி யன்று நடைபெற்றது. உலக அளவில் பாரம்பரி யமிக்க தொன்மையான சமூ கம் தமிழ் சமூகம். உலக மரபு நாள் முன்னிட்டு, கோவை பந்தைய சாலை பகுதியில், தனியார் அறக்கட் டளை சார்பாக, உலக மரபு நாள் விழிப்பு ணர்வு பேரணி நடத்தப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உள்ளிட் டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர். மரபை காப்பது, பண்பாட்டை போற்றுவது, வரலாற்றை மீட்பது உள்ளிட்டவற்றின் சாரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி 6 கல்லூரிகளை சார்ந்த மாணவ, மாணவியர் பேரணியாக சென்று மரபு சார்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி னர். கோவை பந்தைய சாலை முகப்பு பகுதி யில் ஆரம்பித்த இந்த பேரணி, மீடியா டவர் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் வந்தடைந்தது.