tamilnadu

img

தஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

தஞ்சாவூர் நவ.22- தஞ்சை பெரிய கோவிலில் 1996ம்  ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட் டது. அதன் பின்னர் 24 ஆண்டு களுக்குப் பிறகு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி 5 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி தொல்லியல் துறை சார்பில் பெரியகோவிலில் சீர மைப்பு பணிகளும் நடைபெற்று வரு கின்றன. கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளை யும் அதிகாரிகள் செய்து வருகிறார் கள். இது குறித்து ஆட்சியர் ம.கோவிந்த ராவ் ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து, மாநகராட்சிக்குட்பட்ட பழைய மாவட்ட ஆட்சியர் அலுவல கம் உள்ளிட்ட இடங்களில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்தி வேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி,  தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலு வலர் வேலுமணி, நகர்நல அலுவலர் நமச்சிவாயம், வட்டாட்சியர் வெங்க டேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.