போலீசாரை சுட முயன்ற நபர் கைது
கோவை, மே 15- நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த நபர் போலீசாரை சுட முயன்றபோது, போலீசார் அவரது காலில் துப்பாக் கிச்சூடு நடத்தி கைது செய்தனர். கோவை மாவட்டம், கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஹரி ஸ்ரீ, தனது நண்பரான சக்திவேல் என்பவருடன் புத னன்று மது போதையில் ஏற்பட்ட தகராறில், நாட்டுத் துப்பாக் கியை வைத்து வானத்தை நோக்கி சுட்டு மிரட்டியதாகத் தெரி கிறது. இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் விசாரணைக்காக ஹரி ஸ்ரீயிடம் சென்றார். அப்போது, போலீசாரை துப்பாக் கியால் சுட முயன்று தப்பிக்க முயற்சித்த ஹரி ஸ்ரீ மீது, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த னர். காலில் காயமடைந்த ஹரி ஸ்ரீ, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, வியாழனன்று சூலூர் காவல் நிலையத்தில் ஆயுதங்களை காட்டி மிரட்டுதல், அரசு அதி காரியை செயல்பட விடாமல் தடுத்து தாக்குதல், சட்டவி ரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல், கொலை செய்யும் நோக் கில் துப்பாக்கியை பயன்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் புகாரின் அடிப்படையில், சூலூர் போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இச்சம்பவம் குறித்து மேலும் விசா ரணை நடத்தி வருகிறார்.
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
கோவை, மே 15- கோவை வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில், காட்டு யானை தாக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் உயி ரிழந்தார். கோவை மாவட்டம், பூலுவப் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யு (33), திருமணம் ஆகி இரண்டு குழந்தை கள் உள்ளனர். பள்ளி விடுமுறையை முன்னிட்டு தனது மனைவி மற்றும் குழந் தைகளை மனைவியின் தந்தை வீட் டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந் நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுரேஷ்அபிமன்யு நரசீபுரத்தை சேர்ந்த நண்பரான சரவணன் (28) என்பவருடன் புதனன்று இரவு இரு சக்கர வாகனத்தில் வைதேகி நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் சென் றுள்ளார். அப்போது அருகே விவசா யத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டி வந்துள்ளனர். அந்த யானை வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் வந்த போது அதனை கண்ட சுரேஷ் அபிமன்யு மற்றும் சரவணன் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து ஓட முயன்றனர். அப்போது காட்டு யானை தாக்கியதில் சுரேஷ் அபிமன்யு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன் காயங்களுடன் உயிர் தப்பி னார். இதையடுத்து யானையை வனத் துறையினர் விரட்டினர். தகவல் அறிந்து வந்த ஆலந்துறை போலீசார் சுரேஷ் அபிமன்யு உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
வெள்ள மீட்பு ஒத்திகை: தயார் நிலையில் அரசு அதிகாரிகள்
நாமக்கல், மே 15 – கவிரி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகையில் எத்தகைய மீட்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்த ஒத்திகை வியழனன்று நாமக் கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் சமயங்களில் காவிரி கரையோரப் பகுதிகளான குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளை யத்தில் வெள்ள அபாயம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி பாலக்கரை காவிரி ஆற்றுப் பகுதியில் நடைபெற்றது. குமாரபாளையம் வட்டாட்சியர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க, உடனடி யாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபாய எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, காவிரியில் சிக்கியவர்களை பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப் பான இடங்களில் தங்க வைப்பது மற் றும் அவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் வழங்குவது குறித்தும் ஒத் திகை நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சி யர் ச.உமா அவர்கள் சம்பவ இடத் திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்ததுடன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சிறப் பாக செயல்பட்ட தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை யினருக்கு மாவட்ட ஆட்சியர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த மீட்பு ஒத்திகை தத்ரூபமாக நடை பெற்றதால் அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர்.