மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை வழக்கு மகாலிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர் கைது
பொள்ளாச்சி, மே 31- பொள்ளாச்சி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனியார் மனநல காப்பக உரிமை யாளரிடம் 17 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் அபகரித்த மகாலிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் யுத்ரா சேரிட்டெ பில் டிரஸ்ட் என்ற தனியார் மனநல காப்பகத்தில் கோவை, சோமனூர் அடுத்த கரவளி மாதப்பூரை சேர்ந்த ரவிக் குமார் தனது மகன் வருண்காந்த் (24) மனநலம் பாதிக்கப்பட்டி ருந்த அவரை சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். கடந்த 15-05-25 ஆம் தேதியன்று மனநல காப்பகத்தில் இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் இறந்து விடவே அதனை மனநல காப்பகம் மறைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இறந்த வருண்காந்தின் தந்தை ஆழி யார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகா ரின் அடிப்படையில் காப்பக மேலாளரை போலீசார் கைது செய்யப்பட்டு நடத்திய விசாரணையில் இளைஞரை கொன்று புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டது. கடந்த சனியன்று அன்று சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலாளர் நித்திஷ், நிர் வாக குழு உறுப்பினர் கிரிராம், பணியாளர் ரங்கநாயகி உள் ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தலைமறை வாக இருந்த காப்பக உரிமையாளர் கவிதா மற்றும் அவ ரது உறவினர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக தனிப்படை அமைத்து விசா ரணை செய்த போது தனிப்படையில் இடம்பெற்ற பொள் ளாச்சி மகாலிங்கபுரம் காவல் உதவி ஆய்யாளர் நவநீத கிருஷ்ணன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்பக உரி மையாளர் கவிதாவிடம் 17 பவுன் நகை மற்றும் சுமார் 1.8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து அதை உயர் அதி காரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளார். தற்போது பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசா ரணை செய்த போது உண்மை தெரிய வரவே தற்போது மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் வழக்கு விவகாரத்தில் பறிமுதல் செய்த உடமைகளை தன்வசப்படுத் திக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.
விவசாயிகளை ஏமாற்ற முயலும் தனியார் சர்க்கரை ஆலை: விவசாயிகள் குற்றச்சாட்டு
ஈரோடு, மே 31- சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளை ஏமாற்ற முயல்வதாகக் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குறைதீர் கூட்டத்தில் குற்றச் சாட்டி உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வெள் ளியன்று நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு பிரச்சனை களை முன்வைத்து மாவட்ட நிர்வாகத்திடம் தீர்வு கோரி னர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி மனு அளித்து பேசுகை யில், சத்தியமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம், சட்டப்படி விவசா யிகளுக்கு லாபத்தில் தர வேண்டிய பங்கு தொகையான ரூ.14 கோடியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. கடந்த மார்ச் 23, 2025 அன்று நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் தொகையை வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிர்வாகம், இதுவரை வழங்கா மல் விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது. எனவே, இந்த தொகையை விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பயனாளிகளின் பட்டி யலை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசுகையில், மேலும், அந்தியூர் வட்டத் தில் உள்ள அந்தியூர், அத்தாணி, கெட்டிசமுத்திரம் ஆகிய நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கம் 1942 இல் உருவாக்கப் பட்டது. இந்த சங்கங்களில், ஆரம்பத்தில் 286 உறுப்பினர் கள் இருந்தனர், தற்போது 90 உறுப்பினர்கள் மட்டுமே இருக் கின்றனர். உறுப்பினர் இறந்தால், அக்குடும்பத்தில் மூத்த மகன் மட்டுமே உறுப்பினராக முடியும் என்ற விதி, குடும்ப சண்டைகளுக்கு வழிவகுத்துள்ளது. இதனால், அரசு மானி யங்கள், சொட்டு நீர் பாசன மானியம், பிரதமரின் திட்டப்படி ஆண்டுக்கு ரூ.6000 போன்ற சலுகைகள் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. இந்த சங்கங்களை கலைப்பதற்கு உதய சந்திரன் ஆட்சியராக இருந்தபோது முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டும், வாரியம் வந்த பிறகு தவறான தகவல் கள் அளிக்கப்பட்டு வருகிறது. இன்றும் சுமார் 1500 பேர் இந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட ஆவணங்களைக் கொண்டுவந்தால் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார். இதேபோன்று இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், வனவிலங்குகளால் பயிர்கள் சேத மாவது, உயர்மின் கோபுரம் அமைப்பதால் ஏற்பட்ட சிக்கல் ஆகியவைகள் குறித்து பேசினர். இந்தக் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்கு நர் மீ.தமிழ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (வேளாண்மை) சி.லோகநாதன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகரன், தோட்டக்கலை இணை இயக்குநர் மா.குருசரஸ்வதி, ஈரோடு விற்பனைக்குழு செய லாளர் சாவித்திரி உட்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பைக்காரா படகு இல்லம் மீண்டும் திறப்பு
உதகை, மே 31- ஐந்து நாட்களாக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் மீண்டும் சனியன்று திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பய ணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொட்ட பெட்டா காட்சி முனை, பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், உதகையில் மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில் உதகை-கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலங்க ளில் ஒன்றான பைக்காரா படகு இல்லம் கடந்த ஐந்து நாட்க ளுக்கு பின் சனியன்று மீண்டும் திறக்கப்பட்டது. கோடை சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், கர்நா டகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் பைக்காரா படகு இல்லத்தில் குளு குளு கால நிலையை அனுபவித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.