அரசுப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவக்கம்
கோவை, மே 19- கோவை மாநகராட்சிக் குட்பட்ட ஆரம்பப்பள்ளி யில் புதிதாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங் கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தமிழ்நாட்டில் தற் போது அரசு ஆரம்பப் பள்ளி களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டு வருகிறது. 2025 - 26 ஆம் கல்வி ஆண் டில் கோவை மாநகராட்சியால் நிர் வகிக்கப்படும் பள்ளிகளில், சுமார் 59 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு கள் புதிதாக தொடங்குவதற்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத் தின் கீழ், திங்களன்று பி.என்.புதூர் மாந கராட்சி ஆரம்பப்பள்ளியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட் டது. இந்நிகழ்வில், 41 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன், பள்ளியின் தலைமையாசிரியர், ஆசி ரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.