tamilnadu

img

குழந்தைகள் பார்வை குறைபாடு அதிகரிப்பு

குழந்தைகள் பார்வை குறைபாடு அதிகரிப்பு

கண் மருத்துவர்கள் எச்சரிக்கை!

கோவை, ஜூன் 27– அதிகரித்து வரும் செல் போன் பயன்பாடு காரண மாக குழந்தைகள் இடையே கண்பார்வை பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், 8 வயதிற்குள் கண் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை அளித்து பார்வையை மீட்டெ டுக்க முடியும் எனவும் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம்  மற்றும் வாசன் ஐ கேர் நிறுவனங்களுக்கி டையே கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை கள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப் பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு வெள்ளி யன்று நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோயமுத் தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் தங்கராஜா தலைமை வகித்தார். மருத்துவ மனை மருத்துவர்கள் ஜெக ஜனனி, ஹரிதா வாசுதேவன், மருத்துவமனையின் மார்க் கெட்டிங் தலைவர் விஜய பிரான்சிஸ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் பங்கேற்று மருத்துவர்கள் கூறுகையில், கொரோனா பேரிடருக்கு பிறகு  வீடுகளில் உள்ள குழந்தைகள் இடையே  செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் கண் பார்வை பிரச்சனைகள் அதிகரித்து வரு வதாக தெரிவித்தனர். குறிப்பாக 6 மாதம் முதல் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இடையே இந்த கண்பார்வை பிரச்சினை மிக வும் அதிகரித்து வருவதாக அவர்கள் கவலை  தெரிவித்தனர். குழந்தைகளுக்கு 8 வயதிற்கு முன்னதாகவே இந்த குறைபாடுகள் கண்டறி யப்பட்டால் அதனை அறுவை சிகிச்சை இன்றி நவீன மருத்துவ முறைகளின் மூலம் சரி செய்து விட முடியும் என தெரிவித்த மருத் துவர்கள், உரிய பரிசோதனைகளின் மூலம் மட்டுமே பார்வை குறைபாடு தொடர்பான பிரச்சனைகளை கண்டறிய முடியும் எனவும் தெரிவித்தனர். எனவே குறிப்பிட்ட கால இடை வெளியில் குழந்தைகள் மற்றும் பெரிய வர்கள் தங்களது கண் பார்வை குறித்து பரிசோ தனைகள் செய்து கொள்ள வேண்டும் என  அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, பரி மாறிக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் பத்தி ரிகையாளர்கள், மருத்துவமனை நிர்வாகி கள், ஊழியர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். செயலாளர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.