tamilnadu

img

தங்கம்மன் கோயில் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைப்பு

தங்கம்மன் கோயில் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைப்பு

ரத்துப்பாளையம் அணைக்கு  அருகே தங்கம்மன் கோயில் உள்ளிட்ட  பல பகுதியில் 2500 மரக்கன்றுகள் நடவு  செய்யும் பணியை வெள்ளியன்று மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் துவக்கி வைத்த னர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஒரத்துப்பாளையம் அணை  அருகே தங்கம்மன் கோவில் பகுதியில்  திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, துளிகள் அமைப்பு மற்றும் வனத்துக்குள் திருப்பூர் இணைந்து மரம் நடும் விழாவை நடத்தி னர். இதில் மாவட்ட முதன்மை நீதிபதி,  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு  தலைவர் என்.குணசேகரன் மற்றும்  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு  துவக்கி வைத்தனர்.பொதுப்பணித்  துறையின் ஏரியில் 2ஆயிரம் மரக்கன் றுகளையும்,  ஊத்துக்குளி ஆர்.எஸ்  முதல் படியூர் வரை செல்லும் சாலை யின் இரு ஓரங்களில் 200 மரக்கன்றுகள்  நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து,  உடுமலைப் பேட்டை வட்டம், பெரியவாளவாடி ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில்  100 மரக்கன்றுகள், பல்லடம் வட்டம்,  புளியம்பட்டி ஊராட்சியில் வேப்பம் கொட்டப்பாளையம் கிராமத்தில் 100  மரக்கன்றுகள் மற்றும் அவிநாசி பேரூ ராட்சி தாமரைக்குளம் பொதுப்பணித்  துறையின் ஏரிக்கரையில் 100 மரக்கன்று கள் என மொத்தம் 2500 மரக்கன்றுகள்  மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  நடவு செய்யப்படுகிறது.  இந்நிகழ்ச்சியில், பார் அசோசியே சன் தலைவர் கே.என்.சுப்பிரமணியம்,  சார்பு நீதிபதி மற்றும் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.