tamilnadu

img

காவிரி படித்துறையில் குவியும் குப்பைகள்

காவிரி படித்துறையில் குவியும் குப்பைகள்

நாமக்கல், ஜூன் 5- குமாரபாளையத்தில் பாயும் காவிரி ஆற்றின் படித் துறையில் குவியும் குப்பை களால், பொதுமக்கள் அவ திக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே காவிரி படித்துறை உள்ளது. சுமார் 20 படிகள் இருந்த நிலையில், தற்போது அனைத்து படிகளும் குப்பைகளால் மூடப்பட் டுள்ளன. இதனால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி, குளிக்கவும், துணி துவைக்கவும் முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. குமாரபாளையத் திலுள்ள எண்ணற்ற கோவில்களில் திருவிழா என்றால், இந்த படித்துறையில்தான் தீர்த்தக் குடங்கள் எடுத்து சென்று வழிபடுவது வழக் கம். தற்போது தீர்த்தம் எடுக்க வருபவர்கள் கூட, வேறு படித்துறைக்கு செல்லும் நிலை  ஏற்பட்டுள்ளது. இந்த படித்துறை பகுதியில், நகராட்சி அலுவலகத்திற்கு வருவோர்களின் வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. ஆனால், மற்ற படித்துறையில் வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி இல்லை. நக ராட்சி அலுவலகம் இருக்கும் இடம் அரு கில் உள்ள படித்துறை, பொதுமக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இந்த படித்துறையிலுள்ள குப்பை களை அகற்றி, பொதுமக்கள் காவிரி ஆற்றில்  இறங்கி துணி துவைக்கவும், குளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம், நில நிர் வாக ஆணையர் கே.சு.பழனிச்சாமி தலைமையில் வியாழனன்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.உமா மற்றும் அரசுத்துறை அதி காரிகள் கலந்து கொண்டனர்.