அதிமுக பிரமுகர் மீது மோசடி வழக்கு
கோவை, ஜூன் 5- அதிமுக பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான ஆற்றல் அசோக் குமார் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீ சார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். கடந்த 2006 இல் இருந்து கோவை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநராக இருந்தவர் ஆற்றல் அசோக்குமார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஈரோடு நாடாளு மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜக மாநில ஓபிசி அணி தலைவ ராக இருந்த இவர், அண்ணாமலை உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எடப்பாடி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தவர். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் அவ ருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் மொடக்குறிச்சி பாஜக எல்.எல்.ஏ சி.ஆர்.சரஸ்வதியின் மருமகனான ஆற்றல் அசோக்குமார் சொத்து மதிப்பு ரூ.683 கோடி என தேர்த லின் போது கணக்கு காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மார்ச் - 24 ஆம் தேதியன்று ஆற் றல் அசோக்குமார், பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக நிர் வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அனைத்து அதிகாரங்களும் திரும்ப பெறப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஜெயராம் பாலகிருஷ்ணன் மற்றும் சிவ சங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் புதி தாக வந்த நிர்வாகத்தினர் கணக்குகளை ஆய்வு செய்த போது ஆற்றல் அசோக்குமார் போலியான ஆவணங்களை காட்டி 45 பேருந்துகள் வாங்க, வங்கி மற்றும் தனியார் நிதி நிறு வனங்களில் பணம் பெற்றது தெரியவந்தது. மேலும் பேருந் தின் அசல் விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கியது லாபம் பெறும் நோக்கத்தில் செயல்பட்டது கண்டறியப்பட் டது. மேலும் இதற்காக கடந்த பிப்.28 ஆம் தேதி நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது போல போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடு பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநர் சிவசங்கரன் பட்டனம் சிங்காரம், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குந ராக இருந்த அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக் குமார் மீது 336(3), 340(2), 316 (2), ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
தடுப்பணையில் குளித்து மகிழும் குரங்குகள்
மே.பாளையம், ஜூன் 5- மேட்டுப்பாளையம் அடுத் துள்ள கல்லாறு பகுதியில் உள்ள தடுப்பணை நீரில் குதித்து கொண்டு ஆனந்த குளியலிடும் குரங்குகளின் காட்சிகள் வைர லாகி வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலையடிவார பகுதியான கல்லாறு வனம் சூழ்ந்த இயற்கை எழில் மிகுந்த இடமாகும். இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன. இதில் குரங்கு கூட்டமொன்று அங்குள்ள தடுப்பணை தண்ணீரில் எகிறி குதித்து நீந்தி மகிழ்ந்தபடி குளிக்கும் காட்சிகளை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த காணொளி வைரலாகி வருகிறது.
ஆந்திராவைப் போல உதவித்தொகை வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்
சேலம், ஜூன் 5- ஆந்திர மாநிலத்தைப் போல உதவித்தொகை வழங்க வேண்டும், என மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சேலம் மாவட் டம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா 3 ஆவது மாநாடு, பேரூராட்சி சமுதாய கூடத்தில் புதனன்று நடைபெற்றது. சங் கத்தின் தாலுகா தலைவர் டி.விஜயன் தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை டி.ராமமூர்த்தி ஏற்றி வைத்தார். மாவட் டக்குழு உறுப்பினர் பி.இளங்கோ அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட இணைச்செயலாளர் அமலாராணி துவக்கவுரையாற்றினார். தாலுகா செயலாளர் பி.பாரதி அறிக் கையை முன்வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.குணசேக ரன், பொருளாளர் எம்.கனகராஜ், இணைச்செயலாளர் ஏ.கந் தன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், ஆந்திர மாநிலத் தைப் போல், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.6000 முதல் ரூ.15 ஆயிரம் வரை உயர்த்தி வழங்க வேண்டும். பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா முழுவ தும் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திற னாளிகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக பொ.பாரதி, துணைத்தலைவர்களாக த.ராமமூர்த்தி, சி.சுமதி, செயலாளராக க.காளிதாஸ், இணைச்செயலாளர்களாக டி.விஜயன், ரா.லட்சுமி, பொருளாளராக ப.சபிதா மற்றும் 17 தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் தோ.வில்சன் நிறைவுரையாற்றினார்.
முறைகேடாக ரயிலில் பயணம்: ரூ.2.06 கோடி அபராதம்
சேலம், ஜூன் 5- சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 27,211 நபர்களிடமி ருந்து ரூ.2.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இன்றியும், முறைகேடாகவும் பயணம் செய்யும் நபர்களை பரிசோதகர் கள் பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்தவகை யில் கடந்த மே மாதம், சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 14,611 நபர்களுக்கு ரூ.1,29,59,244 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. அதேபோல, முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுத்து, முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் வைத் துக்கொண்டு ஏசி பெட்டிகளிலும் முறைகேடாக பயணித்த 12,540 நபர்களிடமிருந்து ரூ.76,33,211 அபராதம் வசூலிக்கப் பட்டது. மேலும், ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்துச் சென்றதாக 60 பயணிகளுக்கு ரூ.35,328 அப ராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் மட்டும் ரூ.2.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
960 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
சேலம், ஜூன் 5- பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டம், வீராணம் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா தலைமை யிலான காவல் துறையினர், வீராணம் பிரதான சாலையில், சுக்கம்பட்டி அரசுப் பள்ளி முன் உள்ள சோதனைச்சாவடி யில் புதனன்று அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டதில், 420 கிலோ தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த அசோக் ராணா, மெஹர் சிங் ஆகியோரி டம் விசாரணை நடத்தினர். அப்போது, பெங்களூருவிலிருந்து அரூர், மஞ்ச வாடி கணவாய் வழியாக சேலத்திற்கு புகையிலைப் பொருட்களை கடத்திவந் தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் பயணித்த காரையும் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இதேபோல, செவ்வாய்ப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மணி தலைமையிலான போலீசார், சேலம் நான்கு சாலைப் பகுதியில் செவ்வா யன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அவ்வழியாக வேக மாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மூட்டை மூட்டையாக குட்கா, ஹான்ஸ், கூலிப் உள்பட புகையிலைப் பொருட் கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காரிலிருந்து 540 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த சேலம் இரும்பாலை பகுதி யைச் சேர்ந்த பூபதியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டெருமை
உதகை, ஜூன் 5- உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் காட்டெருமை வீட்டுக்குள் நுழைய முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் காட்டெருமை, கடமான், புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உள்ளன. உதகை நகரில் காட் டெருமை நடமாட்டம் அதிக ரித்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய அக்ரஹாரம், ஆரணி ஹவுஸ் பகுதியில் காட்டெருமைகள் சுற்றி திரிந்தது. மேலும், உதகை மார்க்கெட் பகுதி யில் இரவு நேரங்களில் காட் டெருமைகள் சாலைகளில் வலம் வருகின்றன. இதன் பின்னர்கடந்த சில நாட்க ளாக அதன் நடமாட்டம் குறைந்த நிலையில் தற் போது மீண்டும் அதிகரித்துள் ளது. இந்நிலையில் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் புதனன்று இரவு காட்டெ ருமை ஒன்று வீட்டுக்குள் வர முயற்சி செய்தது. சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு வீட்டுக் குள் செல்ல வழி இல்லாத தால் திரும்பி சென்று விட் டது. இந்த காட்சிகள் தற் போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.