மலைப்பாதைகளில் யானைகள் நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
ஈரோடு, ஏப்.20- கடம்பூர் மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியுள்ளதாவது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இப்பகுதியில் யானைகள் சாலையில் சுற்றித் திரிவது வழக் கம். இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் குடிநீர், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக யானைகள் அடிக்கடி மலைப் பாதையை கடந்து செல்கின்றன. இவ்வாறு சாலையைக் கடக்கும் யானைகளை வாகன ஓட்டிகள் கைப் பேசியில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்கின்றன. மேலும், பலர் வாகனத்தில் இருந்து இறங்கி படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்று தொந்த ரவு செய்வதால் யானைகள் – மனித மோதல்கள் ஏற்படுகிறது. எனவே அதுபோல மலைப் பாதையில் சுற்றி திரியும் யானை களை வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுக்கிறேன் என்ற பெய ரில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள் ளனர்.
மீன் விலை உயர்வு
திருப்பூர், ஏப்.20 திருப்பூர் தென்னம்பா ளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிறன்று வழக்கத்தை விட கூடுதலான விலைக்கு மீன்கள் விற்கப்பட்டது. இதுகுறித்து விற்பனை யாளர்கள் சிலர் கூறுகை யில், கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்க ளில் வங்கக் கடல் பகுதிக ளில் மீன்கள் இனப்பெருக் கம் செய்யும் காலம் என்ப தால் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குறிப் பிட்ட நாட்களுக்கு விசைப்ப டகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்.14 நள்ளிரவு முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்க ளுக்கு மீன்பிடி தடைக்கா லம் அமல் படுத்தப்பட்டுள் ளது. இதனால் மீன் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே திருப்பூரில் மீன் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற னர்.
துப்பாக்கிச் சுடும் போட்டி நிறைவு
கோவை, ஏப்.20- கோவை மாநகரில் காவல் ஆணையர் அலுவல கம் தொடங்கப்பட்டு 35 ஆண் டுகள் நிறைவடைந்ததை யொட்டி, மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி வெள்ளி மற்றும் சனியன்று நடைபெற்றது. இதில், காவல் ஆணையர், உதவி ஆணையர்கள், ஆய்வாளர் கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர். காவலர் பயிற்சி மைதா னத்தில் சனிக்கிழமை நடை பெற்ற இறுதிப் போட்டி யில் சைபர் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் சிவகுமார் முதலிடத்தைப் பிடித்தார். மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் இரண் டாம் இடத்தையும், நுண்ண றிவுப் பிரிவு ஆய்வாளர் சிவகுமார் மூன்றாம் இடத் தையும் பிடித்தனர்.
இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வார்டு உறுப்பினர் பதவிக்கு விரைவில் இடைத்தேர் தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற வர்களில் சிலர் பதவி விலகல், திடீர் மரணம் போன்றவற்றால் உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை யிலான காலிப் பணியிடங்களுக்கு இடைத் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தற்போது அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், அனைத்து மாவட்டங்களிலும் தோ்தல் ஆணைய அறிவுரைகளின்படி மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகளில் ராசிபுரம், திருச்செங்கோடு நகராட்சி களில் 2 வார்டுகளும், வெண்ணந்தூர், அத்த னூர், காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பேரூ ராட்சிகளில் 5 வார்டு உறுப்பினர் பதவியி டங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்க ளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடை பெற உள்ள நிலையில், அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கள்ளக்கு றிச்சி மாவட்டத்திலிருந்து 35 எண்ணிக்கை யில் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், மயி லாடுதுறை மாவட்டத்திலிருந்து 50 வாக்குப் பதிவு இயந்திரங்களும் நாமக்கல்லுக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட் டன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வாக்கு இயந்திரங்கள் இருப்பு கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப் பட்டு அறைக்கு சீலிடப்பட்டது.
மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
நாமக்கல், ஏப்.20- கொல்லிமலைக்கு செல்லும் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள் ளானதில், 20க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் வெள்ளி யன்று நாமக்கல் மாவட்டம், கொல்லிம லைக்கு சென்றுவிட்டு, சனியன்று ஊர் திரும் பியுள்ளனர். முள்ளுக்குறிச்சி அருகே நரி யன்காடு பகுதியில் வளைவில், வேன் பிரேக் பிடிக்காமல் சென்றதால், டயரில் சத்தம் வந் துள்ளது. இதனையடுத்து பயணிகளை எச்ச ரித்த வேன் ஒட்டுநர் அங்குள்ள திருப்பத்தில் செடி கொடிகள் மரங்கள் உள்ள புதரில் மோதி நிறுத்தினார். இதில் வேன் சாய்ந்து கவிழ்ந்த நிலையில் நின்றது. இவ்விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் உட்பட 20க்கும் மேற்பட்டோர், 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக் கல், ராசிபுரம், ஆத்தூர் போன்ற அரசு மருத்து வமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து செங்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடக்க இருப்பவை
தேசிய திறனறித் தேர்வில் (என்எம்எம்எஸ்) வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
நாள்: திங்கட்கிழமை நேரம்: மாலை 5 மணி
இடம்: அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகம், உடுமலை
ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
கஞ்சா விற்பனை 4 பேர் கைது
திருப்பூர், ஏப்.20- அவிநாசி அருகே கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸார் சனியன்று கைது செய்த னர். அவிநாசி, தெக்கலூர் பகுதியில் போலீஸார் சனியன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த தெக்க லூர் காமராஜர் நகரைச் சேர்ந்த தினேஷ் செபஸ்டின் (38), தெக்கலூர் ஏரிப்பாளையம் மாகாளியம்மன் கோயில் வீதி யைச் சேர்ந்த லட்சுமி (57), தெக்கலூர் வெள்ளாண்டிபாளை யத்தைச் சேர்ந்த துளசிமணி (55) ஆகியோரை கைது செய்த னர். அதேபோல, பல்லடம் கரைப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வெளிமாநி லத்தைச் சேர்ந்த சுமன்மாணிக்(35) என்பவரை மது விலக்கு போலீஸார் கைது செய்தனர். திருப்பூர், ஏப்.20- அவிநாசி அருகே கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸார் சனியன்று கைது செய்த னர். அவிநாசி, தெக்கலூர் பகுதியில் போலீஸார் சனியன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த தெக்க லூர் காமராஜர் நகரைச் சேர்ந்த தினேஷ் செபஸ்டின் (38), தெக்கலூர் ஏரிப்பாளையம் மாகாளியம்மன் கோயில் வீதி யைச் சேர்ந்த லட்சுமி (57), தெக்கலூர் வெள்ளாண்டிபாளை யத்தைச் சேர்ந்த துளசிமணி (55) ஆகியோரை கைது செய்த னர். அதேபோல, பல்லடம் கரைப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வெளிமாநி லத்தைச் சேர்ந்த சுமன்மாணிக்(35) என்பவரை மது விலக்கு போலீஸார் கைது செய்தனர்.