tamilnadu

img

நொய்யலாற்றில் வெள்ளம்: குளங்களுக்கு நீர் வராததால் விவசாயிகள் வேதனை!

நொய்யலாற்றில் வெள்ளம்: குளங்களுக்கு நீர் வராததால் விவசாயிகள் வேதனை!

கோவை, மே 28- கோடை மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்ட போதிலும், கோவையில் உள்ள குளங்களுக்கு நீர் சென்றடையா ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் தொடங்கி, கோவை,  திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைக் கடந்து, கரூரில் காவிரியில் கலக் கும் 180 கிலோமீட்டர் நீளமுள்ள நொய்யல் ஆற்றில், தற்போது நீர் வரத்து அதிகரித்து காட்சியளிக் கிறது. சிறுவாணி மலை அடிவாரத் தில் பதிவான 128 மில்லிமீட்டர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களாக வறண்டி ருந்த ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப் பணையான சித்தரைச்சாவடி தடுப் பணையிலிருந்து விநாடிக்கு 500  கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. ராஜவாய்க்காலில் விநா டிக்கு 100 கனஅடி தண்ணீர் சீராக செல்கிறது. அதேபோல கோவை புறநகர் பகுதியான சூலூரில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. எனினும், பல இடங்களில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து  வளர்ந்துள்ளதால், குளங்களுக் குள் நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள் ளது. இந்தக் குளங்களில் ஏற்க னவே கழிவுநீர் கலந்திருப்பதால், அசுத்தமான நீரை வெளியேற்றி விட்டு, புதிய வெள்ள நீரை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நொய்யல் பாது காப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறுகையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களிடம் இது தொடர்பாக பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குளம் குட்டை களை தூர்வாரவும், நொய்யலில் வரும் நீரை குளங்களில் தேக்கவும்