tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலை அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோவை, மே 22- மேட்டுப்பாளையம், வால்பாறை போன்ற மூன்று தேவை யான இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில்  உள்ளார்கள் என அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுவசதி,  மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வை துறை அமைச்சர் முத்து சாமி மேட்டுப்பாளையம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில்  மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் காணொளி காட்சி  மூலம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச் சர், கோவையில் மாவட்ட அளவிலும் மாநகராட்சி அலுவலர்க ளும் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பான முறை யில் செய்து வைத்திருக்கிறார்கள். கடுமையான மழை இல்லை என்றாலும் சில இடங்களில் கூடுதலான மழை  இருக்கிறது. ஐந்து இடத்தில் சிறு, சிறு வீடுகள் பாதிப்படைந் துள்ளது. ஆனால், மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. அதி காரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை  மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளார்கள். மேலும் அச்சம்பவத்தில் இரண்டு பேர் மட்டும் சிறு காயங் களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கள். 16 ஜேசிபி இயந்திரம் உட்பட அவசர காலத்திற்கு தேவைப் படும் அனைத்து உபகரணங்களும் உள்ளது. மேட்டுப்பாளை யம், வால்பாறை போன்ற மூன்று தேவையான இடத்தில் பேரி டர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளார்கள். மேலும்,  தற்பொழுது கூட சில இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், கடந்த முறை மழை பெய்யும் பொழுது ஏற்பட்ட  பாதிப்புகளை கணக்கெடுத்து அது சரி செய்யப்பட்டு உள் ளது. இந்த ஏற்பாடுகள் பற்றி முதலமைச்சர் காலையில் கேட்ட றிந்தார். வால்பாறையில் உள்ள குழுவினரே தற்போதைக்கு  போதுமானவர்கள், தேவைப்பட்டால் கூடுதல் பேரிடர் மீட்பு குழுவினரை அங்கு நகர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்று லாப் பயணிகள் எங்கு செல்ல கூடாதோ அங்கெல்லாம் தடுப்பு கள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மாற்று  பாதையில் செல்வதற்கும் வழிவகை உள்ளதா என்று ஆராய் வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பாதிப்புகள் ஏற்படுவது போன்று இருக்கின்ற பாறைகள் உள் ளிட்டவற்றை பாதுகாப்பாக அகற்றிடவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. வீடுகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தாசில்தார்கள்  சென்று உள்ளார்கள் நிவாரணம் குறித்து ஏற்பாடுகளை அவர்கள் செய்வார்கள். ஒரே நேரத்தில் அதிகப்படியான மழை வரும் பொழுது பிரச்சனைகள் ஏற்படும், மழை நீர்  வடிந்து செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது. மேலும் மோசமான நிலையில் உள்ள வீடுகளுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும்  நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற் கொண்டார். அப்போது அப்பகுதியில் மழையால் முத்தம் மாள் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு சேதமடைந் திருந்தது. அந்த வீட்டை பார்த்து ஆய்வு செய்துவிட்டு, அதிகா ரிகளிடம் மூதாட்டிக்கு அரசு திட்டத்தில் புதிய வீடு கட்டித் தர  அறிவுறுத்தினர். மேலும் அதே பகுதியில் மாற்றுத்திறனாளி இளைஞர் கனீஷை சந்தித்த அமைச்சர் முத்துசாமி அவரது  குறைகளை கேட்டறிந்தார். பின் அவருக்கு வீல் சேர் வழங்க வும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதே போல் வச்சினம் பாளையம் பகுதியில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, போர்வை மற்றும் மளிகை பொருட் கள் கொடுத்து உதவினார்.

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ், பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

உடுமலை, மே 25- உடுமலை சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட் டுள்ள பிளக்ஸ் பேனர்களால்  விபத்து ஏற்படும் அபாயம்  நிலவுகிறது. திருப்பூர் மாவட்டம், உடு மலைநகரப் பகுதிகளில்  100க்கும் மேற்பட்ட இடங்களில் விளம்பர பதாகைகள் அனு மதியின்றி வைக்கப்பட்டுள்ளது.உடுமலை, காந்தி நகரில்  பேருந்து நிறுத்துமிடத்தில் பயணிகள் நிழற்குடையை  மறைத்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,  ஞாயிறன்று சில பதாகைகள் சாலையில் விழுந்து கிடக் கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன  ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,  பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில்  வைத்துள்ள அனைத்து விளம்பரப் பதாகைகளையும் உடனடி யாக நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும், என சமூக ஆர் வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர் சங்க மாநாடு

அவிநாசி, மே 25- இந்திய மாணவர் சங்கத்தின் அவிநாசி தாலுகா மாநாட் டில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் அவிநாசி தாலுகா மாநாடு,  ராமமூர்த்தி இல்லத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இம் மாநாட்டில், அரசுப்பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்ப டுத்த வேண்டும். பள்ளி மாணவர்களைக் கருத்தில் கொண்டு,  பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலை உடனடியாக நடத்த  வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் அவிநாசி தாலுகா தலைவ ராக பார்த்தீஷ், செயலாளராக ஆனந்த், துணைத்தலைவர் களாக சக்தி, கனிஷ்கா, துணைசெயலாளர்களாக மகேந்தி ரன், மோனிகா மற்றும் 15 தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டனர்.

தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து

மேட்டுப்பாளையம், மே 25 - அதிவேகமாக வந்த கார் மேட்டுபாளையம் அருகே நிலை  தடுமாறி சுவற்றில் மோதும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வரு கிறது. நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து திருப்பூர் செல்வதற் காக ஈஸ்வரன் என்பவர் ஞாயிறன்று அதிகாலை காரில் மேலும்  இருவருடன் வந்துள்ளார். மேட்டுப்பாளையம் அன்னூர்  சாலையில் வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் வந்து தியேட்டரின் காம்பவுண்ட் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா தெரியவருகிறது. இந்த விபத்து ஏற்படும்போது சாலையில் நடந்து சென்ற  முதியவர் நூலிலையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் சமூக  வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காரில் இருந் தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பி மேட்டுப்பாளை யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.