tamilnadu

img

வயநாடு பேரிடர் மீட்பு பணிக்காக கோவையில் இருந்து கிளம்பியது டெல்டா குழு!

கேரளா வயநாடு பேரிடர் மீட்புப் பணிக்காகக் கோவையில் இருந்து டெல்டா ஸ்கோர்டு குழுவினர் இராணுவ ஹலிகாப்டர் மூலம் வயநாடு செல்கின்றனர்.

இந்திய இராணுவத்தின் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை என முப்படை அதிகாரிகளால் டெல்டா ஸ்கோர்டு என்ற தன்னார்வ பேரிடர் மீட்புக் குழு‌ அமைக்கப்பட்டது. இந்தக் குழு சார்பில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, நிலச்சரிவு, மண் சரிவு, மலையேற்றத்தின்போது சிக்கியவர்களை மீட்பது, போர்வெல் குழிக்குள் சிக்கியவர்களை மீட்பது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் இந்த மீட்புக் குழு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதுவரை 18க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு உள்ளவர்களை மீட்க மீட்கும் பணியில் ஈடுபடுவதற்காக இராணுவத்தினர் அழைத்தை தொடர்ந்து  முன்னாள் கடற்படை அதிகாரியும், இந்த குழுவின் தலைவருமான ஈசன் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் கோவை சித்தாபுதூரில் இருந்து வேனில் புறப்பட்டு சூலூர் விமானப்படைக்குச் சென்றனர்.

அப்போது அவர்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களே மீட்பதற்கும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பதற்கும் தயாராகக் கயிறு, லைப் ஜாக்கெட், மரம் அறுக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட மீட்புக் குழுவுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அங்கு இருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்பட்டு வயநாடு செல்கின்றனர்.