எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொய்வால், சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள்
நாமக்கல், மே 15- பரமத்திவேலூர் அருகே சாலையோரம் எரிவாயு குழாய் பதிக்கும் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள் ளதால், அடிக்கடி விபத்து கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள் ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவிற் குட்பட்ட பிலிக்கல்பாளை யம் காவிரி ஆற்றுப்பகுதி யில் இருந்து ஆனங்கூர், வடகரை ஆத் தூர், ஜேடர்பாளையம், அரசம்பாளை யம், ஜமீன் இளம்பள்ளி, சோழசராமணி வழியாக சித்தாளந்தூர் வரை தனியார் நிறுவனத்தின் சார்பில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது கடந்த இரண்டு மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக சாலையோரங்களில் தோண்டப்பட்ட குழிகள் இன்னும் முழுமையாக மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் காரில் செல்வோர், இருசக்கர வாகனங்களில் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழசிராமணி பகுதியைச் சேர்ந்த ஒருவர், குடும்பத்தி னருடன் இருசக்கர வாகனத்தில் வந்த போது நிலைதடுமாறி அனைவரும் அந்த குழியில் விழுந்து காயமடைந்தனர். இதுபோன்று இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், சாலையில் செல்ல அச்சமாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.