பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, மே 16- அந்தியூர் பகுதியில், பாதுகாக் கப்பட்ட குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியம், வேம்பத்தி கிராமம், ஓசைபட்டி, பெத்தாம்பாளையம், எம்ஜிஆர் நகர் பகுதியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இம்மக்களுக்கு நெரிஞ் சிப்பேட்டை கூட்டு குடிநீர் திட்டத்தி லிருந்து குடிநீர் வழங்கப்படுகி றது. ஆனால், வேம்பத்தி அம்மன் கோவில் அருகிலிருந்து நீரேற்று நிலையத்திலிருந்து வழங்கப்படும் காவிரி குடிநீர் முறையாக வழங் கப்படுவதில்லை. மாதம் ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. இத னால் அப்பகுதி மக்கள் அக்கம்பக்க கிராமங்களான ஆ.கரட்டுப்பா ளையம், ஆ.புதுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவலம் உள்ளது. இவ் வாறு கொண்டு வரும் குடிநீரை பல நாட்கள் வைத்திருந்து பயன் படுத்துவதால் சுகாதாரக் கேடுக ளும், உடல்நலக்குறைவும் ஏற்படு கிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி யர் வரை மனு அனுப்பியும் நடவ டிக்கை இல்லை. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. எனவே வாரம் இருமுறை பாதுகாக்கப் பட்ட காவிரி குடிநீரை வழங்க வேண் டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஓசைபட்டி மாரியம்மன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிபிஎம் கிளைச் செயலாளர் ஓ.எஸ்.பாட்டையன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.பி.பழனிசாமி, எஸ்.வி.மாரி முத்து, தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் ஆகியோர் பேசினர். ஆர்.கந்தசாமி, ஆர்.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பாட் டப்பன் நன்றி கூறினார்.