tamilnadu

img

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் மாநகராட்சி: சிபிஎம் மறியல் அறிவிப்பு

ஈரோடு, ஏப்.23– ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மே 11 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித் துள்ளது. ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கிய 4  மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 1-வது மண்ட லத்தில் உள்ள 4 ஆவது வார்டுக்கு உட்பட்ட கொங்கம்பாளை யம் பகுதியில் எஸ்.வி.என். பள்ளி கழிவு நீரும், சாக்கடை  கழிவு நீரும் ஒன்றாக கலந்து தேங்கி நிற்கிறது. மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்காததால், பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. சத்தி பிரதான சாலையிலும் கழிவு  நீர் தேங்கி நிற்பதால், அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடை யூறு ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படு கிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணியன் கூறுகையில், கொங்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் எஸ்.வி.என். பள்ளி பகுதியில் வசிக்கும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்தி மண்டல அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி லும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. மாநகராட்சி மேயரிடமும் மனு கொடுக்கப் பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்ப டுத்தும் வகையில் உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வா கத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து மே 11 ஆம் தேதி  சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரி வித்தார்.

அழகு நிலைய பெண் ஊழியர்களிடம் நகை, பணம் பறிப்பு: 7 பேர் கொண்ட கும்பல் கைது

நாமக்கல், ஏப்.23- நாமக்கல்லில் அழகு நிலைய பெண் ஊழியர்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்ற 7 பேர் கொண்ட கும்பலை  தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள வணிக வளா கத்தில் அழகு நிலையம், ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், மல்லூரைச் சேர்ந்த  இளங்கோவன் என்பவர் இந்த மையத்தை நடத்தி வருகி றார். கடந்த ஏப்.17 ஆம் தேதியன்று மாலை, அழகு நிலை யத்திற்கு வந்த 7 பேர் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஆயுர் வேத சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் கேள்வி கேட்ட பெண் ஊழியர்கள் 6 பேரை யும் அறையில் அடைத்த கும்பல், அவர்கள் அணிந்திருந்த நகைகள், அழகு நிலையத்திலிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், கண்காணிப்பு கேமராக்களை திருடிச் சென்றதாக கூறப்படு கிறது. இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் அழகு நிலையத் தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி, காவல் ஆய்வாளர் கபி லன் தலைமையில், நான்கு தனிப்படை அமைத்து உத்தர விட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார், அருகிலுள்ள கட்டி டங்களில் பொருத்தப்பட்டிருந்த, கண்காணிப்பு கேமரா காட் சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஏழு பேர் காரில்  தப்பி சென்றது தெரியவந்தது. கார் பதிவு எண்ணை வைத்து  விசாரணை நடத்தியதில், ஏழு பேர் கொண்ட கும்பல், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைய டுத்து, கரூர் சென்ற போலீசார், வழக்கில் தொடர்புடைய, கார்த் திக், செல்வா, ராஜசேகர், விமல் பஷீர், யுவராஜ், சந்துரு ஆகிய 5 பேரை பிடித்தனர். மேலும், அவர்கள் அளித்த தகவ லின்படி மேலும், இரண்டு பேரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட யானைக்கு தொடர் சிகிச்சை

மேட்டுப்பாளையம், ஏப்.23- சிறுமுகை வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை  மற்றும் மருந்துகள் சத்தான உணவுகள்  வழங்கி sகண்காணித்து வருகினறனர். கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சர கத்துக்குட்பட்ட கூத்தா மண்டி வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண்  காட்டு யானை நோய் வாய்பட்ட காரணத்தால்  மீண்டும் வனப்பகுதிக்குள் நடந்து செல்ல இய லாமல் வன எல்லையிலேயே சோர்வுடன் நின்று விட்டது. இதனால் யானைக்கு செவ்வா யன்று முதல் வனத்துறையினர் மற்றும் மருத் துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்ற னர். செவ்வாயன்று யானைக்கு பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகளை பழங்களில் வைத்து உண்ண கொடுத்தனர். இதனால் சற்றே சுறு சுறுப்படைந்த யானை கூத்தாமண்டி பகுதி யில் இருந்து புதனன்று காலை வனப்பகு திக்குள் செல்வதால் வனத்துறையினர்  யானையை கண்காணித்து வருகின்றனர். மேலும், சிகிச்சையினை மாற்றி கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார் யானைக்கு கரும்பு சக்கரை, வெல்லம் கலந்த சாத  உருண்டையில் மருந்துகளை பிசைந்து வாழை இலையில் கட்டி கொடுப்பது, கரும்பு  மற்றும் தர்பூசணி பழங்களில் நோய் எதிர்ப்பு  சக்தி மாத்திரைகளை வைத்து யானைக்கு  வழங்கி வருகின்றனர். சிறப்புக்குழு மூலம்  யானையின் உடல்நிலை கண்காணிப்பில் உள் ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தனியார் மயத்தை கைவிட, போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கான்ட்ராக்ட்  முறையில் ஆள் எடுப்பதையும், தனியார் மயம் புகுத்துவதை யும் அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க மகாசபை வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் ஈரோடு மாவட்டம், காசிபாளையம் (ஈ1, ஈ3) கிளைகளின் மகாசபை கூட்டம் ஈரோடு வி.பி.சிந்தன் நினைவகத்தில் புத னன்று நடைபெற்றது. சங்க தலைவர் எஸ்.இளங்கோ  தலைமை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் டி.ஜான்சன் கென்னடி தொடக்க உரையாற்றினார். மண்டலத் தலைவர்  கே.மாரப்பன் மற்றும் பொருளாளர் சி.அய்யாசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பன்முக தலைவர் என்.முருகையா நிறை வுரையாற்றனார். ஈ1 கிளைத் தலைவராக வி.குருசாமி, செயலா ளராக எஸ்.சிவக்குமார், பொருளாளராக எஸ்.கோபிநாதன் ஆகியோர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. ஈ2 கிளைத் தலைவராக எம்.கண்ணன், செயலாளராக எஸ்.பெரியசாமி, பொருளாளராக ஓ.மணிக்கண்ணன் மற்றும் 9 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இக்கூட்டத்தில், மே 20 இல் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது என்றும், 15 ஆவது ஊதிய ஒப்பந் தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 30 ஆயிரம் காலிப்பணியிடங் களை சட்டப்படியாக ஆட்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெறு வோர்க்கு அன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும். அக விலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். டீசல் பிடிப்பதற்கான கால தாமதத்தைப் போக்க இரண்டு பம்பு களையும் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதி யிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம் செவ்வாயன்று நடைபெற்றது.

தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளரைக் கண்டித்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணி யாளர்கள் சங்கத்தினர் கோபி கோட்டப் பொறியாளர் அலு வலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டத் தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.