tamilnadu

img

வரி செலுத்தத் தவறினால் ஜப்தி ஈரோடு,

மதுரையில் நடைபெறும் சிபிஎம் அகில இந்திய மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையில், பொள்ளாச்சி தாலுகா சிங்காநல்லூர்கட்சி கிளை சார்பில் செங்கொடி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கட்சிக் கொடிகளால் தயார் செய்யப்பட்ட இந்த செங்கொடி கோபுரம் மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

வரி செலுத்தத் தவறினால் ஜப்தி ஈரோடு,

மார்ச் 12 – நடப்பு ஆண்டுக்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் தொழில் உரிமக் கட்டணங்களை செலுத்த  தவறும்பட்சத்தில், ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நிலுவையில் உள்ள மற்றும்  நடப்பு ஆண்டுக்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்  வரி மற்றும் தொழில் உரிமக் கட்டணங்களை தற்போது வசூல்  செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்க ளது வரி மற்றும் கட்டணங்களை வரும் 31 ஆம் தேதிக்குள்  செலுத்த வேண்டும். சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களிலோ அல்லது ஊராட்சி களப்பணியாளர்கள் மூலமாகவோ வரி  மற்றும் கட்டணங்களை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள லாம். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி வரி செலுத்தத்  தவறினால் ஜப்தி நடவடிக்கையும், தண்ணீர் வரி செலுத் தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, ஈரோடு மாவட்ட பொதுமக்கள் தங்களது வரி  மற்றும் கட்டணங்களை உரிய தேதிக்குள் செலுத்தி, ஜப்தி  நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.