உதவி ஆய்வாளருக்கு முதல்வர் விருது
கோவை, ஜூன் 26- போதைப்பொருள் தடுப்பு வழக்கு நடவடிக்கை களில் சிறப்பாக பணியாற்றிய போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபாலனுக்கு முதல்வரின் “போதை ஒழிப்பு விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 15 காவ லர்களுக்கு தமிழக முதல்வரின் “போதை ஒழிப்பு விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட் டம், போத்தனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாள ராக பணியாற்றி வரும் தனபாலனுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தனபாலன் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 55 வழக்குகளில் 169 பேர் கைது செய்துள்ளார். மேலும் இந்த வழக்குகளில் 161.4 கிலோ கஞ்சா, 77 கிராம் மெத்தபெட்டமைன், 4.12 டன் குட்கா பொருட்கள், 29 இரு சக்கர வாகனங்கள், 5 கார்கள் பறிமுதல் செய்துள் ளார். விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள காவலர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் முதல மைச்சர் விருதுகளை வழங்க உள்ளார்.
இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு கோழிக்கோட்டில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க செல்லும் தமிழக பிரதிநிதிகளுக்கு வியாழ னன்று, கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாநிலத்தலைவர் சம்சீர் அக மது, மத்தியக் குழு உறுப்பினர்கள் பிருந்தா, மிருதுளா மற் றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட் டப் பொருளாளர் தினேஷ் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.