tamilnadu

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தாய் மற்றும் வளர்ப்பு தந்தை மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
தாய் மற்றும் வளர்ப்பு தந்தை மீது வழக்கு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் எட்டாம்  வகுப்பு மாணவி ஒருவரை அவரது வளர்ப்பு  தந்தை பாலியல் வன்கொடுமை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மேலும், இந்த கொடுஞ்செயலை அறிந்தும் புகாரளிக்க மறுத்த சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட் டாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தாயார், கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து, பின்னர் இரு வரை அடுத்தடுத்து திருமணம் செய்து விவா கரத்து பெற்றுள்ளார். தற்போது, மூன்றா வது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது  வளர்ப்பு தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து  விடுவதாக மிரட்டியுள்ளார். பயத்தில் நடுங்கிய சிறுமி, நடந்த சம் பவத்தை தனது தாயாரிடம் தெரிவித் துள்ளார். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகை யில், சிறுமியின் தாயார் இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி, தனது பள்ளி ஆசிரியை அணுகி, குழந்தைகள் உதவி மையத்தின் 1098 என்ற எண்ணிற்கு புகார் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் குன்னூர் அனைத்து மகளிர் காவல்  நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் வளர்ப்பு தந்தை மற்றும் தாயார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த னர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதும், அதை அவரது தாயாரே மறைக்க  முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.