tamilnadu

img

கோவாவில் 20 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது

கோவாவில் மாம்பழ விற்பனையாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 20 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை வைத்திருந்த 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாஸ் ரஞ்சித், மகேந்திர தாக்கூர் ஆகிய இருவரும், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அரம்போலின் பகுதியில் மாம்பழ மரக் பெட்டிகளில் ஏற்றி வந்துள்ளனர். அவர்களை விசாரித்த காவல்துறையினர், சந்தேகமடைந்து வாகனத்தை சோதனை செய்தனர். இதில், மாம்பழ குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் சரஸ் ஷேக்கில் ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும், சுற்றுலா உரிமம் மற்றும் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட கலால் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருள்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் பிரிவு 20 பி,ஏ ஆகியவைகளின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

;