மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு
தருமபுரி, மார்ச் 11- பெண்கள் ஆளும் திறன், தலைமை பண்புமிக்கவர்கள் என மகளிர் தின விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கூறினார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலை மையில் மகளிர் தினம் கொண்டா டப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, மாற்றம் என்பது தாயிடமே உள்ளது. அம்மாவுடைய வளர்ப்பின்படியே குழந்தைகளின் அன்பு, பண்பு, குண நலன்கள் இருக்கும். ஹிட்லர் சர்வதிகாரியாக இருந்தாலும் தன்னை தானே சுட்டுகொண்டு இறக்கும் போது தன்னுடைய தாயின் புகைப்படத்தை கையில் வைத்திருந்தார். இதுவே தாய்மை யின் மகத்துவம், தாயின் சிறப்பு. தாய்மை என்பது வேறு, பெண்மை என்பது வேறு. ஆணுகுள்ளும் தாய்மை உணர்வு இருக்கும். கோபம், வன்மம், ஆளும் திறன், தலைமைப் பண்பு, பொறுமை, அன்பு, பேணும் திறன் போன்றவை மனித குலத்திற்கு பொதுவான குண நலன். பொதுவாக அன்பு, குழந்தை களை பேணுவதை பெண்களுக் குரியது என்றும் ஆளும் திறன், கோபம் போன்ற குணநலன் ஆண் களுக்குரியது என்றும் கருதி கிறோம். பெண்களுக்கும் ஆளும் திறன், கோபம், வன்மம், தலைமை பண்பு போன்ற குணநலன்கள் இருக்கும். இவற்றை ஆண்கள் புரிந்து அங்கீகரிக்கவேண்டும். இவற்றை அங்கீகரிக்ககூடிய வகை யில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பெண்களுக்கு உண்டு.
உலக மாற்றத்தை விரும்பும் பெண்கள் அந்த மாற்றத்தை ஏற் படுத்த கூடியவர்களாக இருக்க வேண்டும். மாற்றத்தை உண் டாக்கும் வலுவான நம்பிக்கை இருந்தால் காண விரும்பும் மாற் றத்தை சமுதாயத்தில் நிச்சயம் பெண்கள் உருவாக்கலாம். அப்பா பொதுவாக தன் பெண் குழந்தையை தாய் என்ற அளவிலே பார்ப்பார். ஆண்களுக்குள் உள்ள தாய்மை உணர்வை வெளிக்கொணர்ந்து நல்வழியில் வளர்ப்பது தாயின் கடமை. பெண்கள் காண விரும்பும் மாற்றத்தை அந்த மாற்றத்திற்குண் டான வித்து பெண்களிடமிருந்தே ஆரம்பிக்கிறது. குழந்தைகளை தீய செயல்கள் குறித்து விழிப்புணர்வு பெறவைப்பது பெண்களின் கடமை யாக உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதாராணி, வருவாய் கோட் டாட்சியர் (பொறுப்பு) தேன்மொழி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நாகலட்சுமி, வட் டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.