கோபி, ஜூன் 19- கோபி அருகே அயலூர் பகுதி யில் அனுமதி இல்லாமல் இயங்கும் கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளைய கவுண்டன்புதூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் பூமிதான நிலத்தில் உரிய அனுமதி இல்லா மல் கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தால் அலங்கியம், குட்டையப்பாளையம், எல்லப்பாளை யம், உருமம்பாளையம், மோளபாளை யம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டு உள்ளதாகவும், கல்குவாரியில் அதிக அளவு வெடிமருந்து பயன் படுத்தப்படுவதால், உடைந்து சிதறும் பாறைகள், வீடுகள் மீது விழுகிறது. இதனால் பொதுமக்கள் காயமடை வதாகக் கூறி மாவட்ட நிர்வாகத்திற் கும், கோட்டாட்சியருக்கும் பலமுறை புகார் அளித்து வந்தனர். மேலும் கல்குவாரி துகள்களால் விவசாய நிலமும், குடிநீர் ஆதாரமும் கடுமை யாகப் பாதிக்கப்படுவதாகக் கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கோபி வருவாய் கோட்டாட்சியர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்தை நடத்தப் பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு முறையும் பேச்சுவார்தை ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு புதனன் றும் அதேபோல் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்திருந்த நிலையில், கோட்டாட்சியர் அலுவலகம் வந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியருக்காகக் காத்திருந்த னர். அப்போது இன்றும் பேச்சு வார்த்தை இல்லை, பேச்சுவார்த்தைக் கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் அலுவலத் தில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத் திரமடைந்த பொதுமக்கள் கோட் டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரம் காத்திருப்பிற்குப் பின்னர் கோட்டாட்சியர் வாராத காரணத் தால், கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலி யுறுத்தி கோபி கோட்டாட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்துவிட்டு திரும்பிச் சென்றனர். இதனால் கோபி கோட் டாட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.