இந்திய விடுதலைக்காக அமைக்கப்பட்ட கிரிப்ஸ் குழுவினருடன் பேசி உடன்பாடு எட்டப்படாததால் மகாத்மா காந்தி விடுதலைக்கான இறுதிப் போருக்கு தயாராகுமாறு இந்திய மக் களுக்கு அறைகூவல்விடுத்தார். செய் அல்லது செத்துமடி முழக்கத்தினை முன்வைத்து விடுதலை வீரர்கள் களத் தில் புகுமாறு உணர்வுப்பூர்மாக தட்டியெழுப்பினார். காந்தியின் அறை கூவல் நாட்டு மக்களுக்கு சென்றடை யும் முன்பாகவே பிரிட்டீஸ் போலீசார் தலைவர்களை கைது செய்து சிறை யில் அடைத்தனர். தேச தலைவர்க ளின் மீதான கைது நடவடிக்கை யினை கண்டித்து நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டங் கள் வெடித்தது. கோவையில் ஏற் கனவே காங்கிரஸ் மற்றும் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் அணிதிரண்ட தொழிலாளர்களின் மத்தியில் விடுதலைப் போராட்ட உணர்வுகள் மேலோங்கியிருந்தது. காங்கிரஸ் தொழிற்சங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் குறிப்பாக தியாகி என்.ஜி.இராமசாமியின் தலைமை யில் கூடிய தொழிலாளர்கள் பிரிட்டீ சாருக்கு தக்க பாடம் கற்றுத் தர வேண்டும் என்று ஆவேசமடைந்தனர்.
இச்சூழலில் கோவை வெள்ள லூரில் பஞ்சாலை தொழிலாளர்கள் சிலர், சுதந்திர வேட்கை கொண்ட மேலும் சிலரை இணைத்துக் கொண்டு ஆங்கிலேயே அரசிற்கு அதிர்ச்சிய ளிக்க முடிவு செய்தனர். இதன்படி இரண்டாம் உலகப் போரில் பிரிட்டீஸ் படைகளுக்கு தேவையான வெடி மருந்துக்களை ஏற்றிக்கொண்டு அர வங்காட்டிலிருந்து வந்த சரக்கு ரயிலை கவிழ்க்க முடிவு செய்தனர். 13.8.1942 அன்று நள்ளிரவில் கே.பி. திருவேங்கிடம் மற்றும் வெள்ளலூ ரைச் சார்ந்த வி.என்.அருணாசலத் தேவர், உறுமநாவிதன், மாரிநாவிதன் ஆகிய நான்கு பேரும் போத்தனூர் அருகே ரயில்வே தண்டவாளப் பாது காப்பில் இருந்த காவலரை தாக்கி அவரை அருகில் இருந்த தோப்பிற் குள் அடைத்துவைத்தனர். இதன்பின் னர் போத்தனூருக்கும், குளத்தேறிக் கும் இடையே சிறிது தூரத்திற்கு தண்டவாளத்தின் அடியில் இருந்த மரக்கட்டைகளை சுழற்றி எறிந்தனர். இதைத்தொடர்ந்து வெடிமருந்து களை ஏற்றி வந்த சரக்கு ரயில் போத் தனூர் வழியாக குளத்தேறி அருகில் வந்தபோது எதிர்பார்த்தவாரே ரயில் பெட்டிகள் கவிழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இது ஆங்கிலேய அரசுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய தால் ரயில் கவிழ்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடி கண்டுபிடித்து அடக்குமுறைகளை ஏவியது.
இதையடுத்து, ரயில் கவிழ்ப்பு சம்பவத்தில் தொடர்புடைய வி.என்.அருணாசலத்தேவர், உறுமநாவிதன், மாரி நாவிதன், அருணாசலம், நஞ்சப்ப செட்டியார், எஸ்.காமாட்சி, கண் ணியப்பன், பெருமாள்கோணார், மாரி யப்பன், வெள்ளிங்கிரி கோணார், வி.வி.சுந்தரம்செட்டியார் ஆகியோர் 2 ஆண்டுகள் 9 மாதங்கள் வரை கடும் தண்டனைகளுக்கு உள்ளாகி கோவை மற்றும் அலிப்பூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்தி லும், உப்பு காய்ச்சும் போராட்டங்க ளிலும் பங்கேற்று சிறை கொட்டடியை எதிர்கொண்டனர். இவ்வாறு வெள்ள லூர் மற்றும் கோணவாய்க்கால் பாளையம் பகுதிகளைச் சார்ந்த 18 பேர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளனர். ஒரே ஊரில் இந்தளவு எண்ணிக்கை யில் தியாகிகளை உருவாக்கிய பெருமை வெள்ளலூருக்கே சேரும். மேலும், நாடு விடுதலைக்கு பின் விடுதலைப் போராட்ட தியாகி வி.என்.அருணாசலம் இருமுறை வெள்ளலூர் பேரூராட்சித் தலை வராக திறம்பட பணியாற்றியுள் ளார். மேலும், விடுதலைப்போராட் டத்தில் பங்கேற்று சிறை சென்று திரும்பிய வி.என்.அருணாசலம் தொடர்ந்து தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டும், பின்னர் வெள்ளலூர் கிரா மத்தின் பொதுநல ஊழியராக காந்திய தொண்டராக சேவை செய்தவர், தனக்கு இளம் வயதிலிருந்தே தேசப் போரட்டத்தை சொல்லிக்கொடுத்தும், சோசலிசத்தின்பால் ஈர்ப்பையும் உருவாக்கித் தந்தவர் எனது தந்தை என்று அவரது மகன் சேதுமணி நெகிழ்ச்சியடன் தெரிவிக்கிறார்.