tamilnadu

img

மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஈரோடு, டிச. 6- மேட்டுபாளையத்தில் சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்தவர்களுக்கு சென்னி மலையில் அனைத்து கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்ட்து. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் அரசின் அலட்சியத்தால் சுற்றுச் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சென்னி மலையில் பேருந்து நிலையம்  முன்பு அனைத்து கட்சிகள் சார்பில் உயிரிழந் தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தற்சார்பு விவ சாயிகள் சங்கத்தின் வே.பொன்னையன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி எஸ்.பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகி ராமசாமி,விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் நிர்வாகி ஈஸ்வரன் உட்பட திரளானோர்கள் பங்கேற்றனர்.