திருப்பூர், செப். 22 – திருப்பூர் தெற்கு மாநகரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சிறப்புப் பேரவை ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தெற்கு மாநகர சிறப்புப் பேரவையை மாவட்டத் தலைவர் டி.ஜெயபால் தொடங்கி வைத்தார். நகரத் தலைவர் ஷகிலா தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் பி.ராஜேஷ் நிறைவுரை ஆற்றினார். இதில் புதிய நிர்வாகிகளாக தெற்கு நகரத் தலைவர் ஏ.ஷகிலா, செயலாளர் ரமேஷ், பொருளாளர் சஞ்சீவ், துணைத் தலைவர் செல்வகுமார், துணைச் செயலா ளர் செல்வி உள்பட 13 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட னர். பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சென்றுவர சாய்தள பாதை அமைக்க வேண்டும், பேருந்து பயண சலுகை அட்டையில் குளறுபடிகளை நீக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கான வங்கிக் கடனை தங்குதடையின்றி வழங்க வேண்டும், உதவித் தொகையை ரூ.3 ஆயி ரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. பொருளாளர் சஞ்சீவ் நன்றி கூறி னார்.