tamilnadu

img

கால்களை பதம் பார்க்கும் கம்பி

சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

உதகை, ஜன. 13- நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகம்  செல்லும் கான்கிரீட் சாலையில் ஆபத்தான  நிலையிலுள்ள  கம்பியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவல கம் செல்லும் வழியேயான சாலை கான்கிரீட் கலவை யினாலானது. இவ்வழியே கோயில் ஒன்றும் உள்ளது. இங்கு அலுவலக பணிகளுக்காகவும், கோவிலுக்கும் ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இச்சாலையின் நுழைவு வாயிலில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் நீட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த கம்பிகள் இவ்வழியாக செல்லும் பலரது கால்களை பதம் பார்த்து வருகிறது. எனவே பொது மக்களின் நலன்கருதி நீட்டிகொண்டு இருக்கும் கம்பிகளை சரி செய்து தர  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்ற னர்.

;