கோவை, ஜூன் 14– தமிழகம் முழுவதும் காலியாக வுள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி வெள்ளியன்று மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 700 மருந் தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பி மக்களுக்கான மருத்துவ சேவையை பாதுகாத்திட வேண்டும். தமிழக பேச்சுவார்த்தையில் அரசு ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியம், மாநில துணை தலைவர் பைரவநாதன் ஆகியோரது பணியிடை நீக்கத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, குமார் மற்றும் ரவி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.