tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை 2020-யை திரும்ப பெற வேண்டும்

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் குலக்கல்வி திட்டமான தேசிய  கல்விக் கொள்கை 2020-யை  மத்திய அரசு திரும்ப பெறு வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் ஞாயிறன்று கோவை ஆவாரம் பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தி.ஒ.முன்னணியின் மாவட்ட செய லாளர் வே.ஆறுச்சாமி, சிபிஎம் பீளமேடு நகரச் செயலாளர் பாண்டியன் மற்றும் ஜோதி பாசு, அய்யாசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டம் முழுவ தும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.