கோவை, ஜூலை 20– மருத்துவ காப்பீட்டு பிரிமி யத்தை வங்கி நிர்வாகமே வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வங்கி ஓய்வூதியர் சங் கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் சனியன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களுக்கு ஊதி யம் திருத்தி அமைக்கப்படும்போ தெல்லாம் ஓய்வூதியர்களுக்கும் திருத்தி அமைப்பதுபோல, வங்கி ஓய்வூதியர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூ தியத்தை 30 சதவிகிதம் உயர்த்த வேண்டும், மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்தை வங்கி நிர்வாகமே வழங்க வேண்டும். ஓய்வூதியர் கோரிக்கைகளை ஓய்வூதியர் சங் கங்களோடு கலந்து பேசி முடி வெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களின் ஒரு நாள் தர்ணா போராட்டம் கோவை டாடாபாத் பகுதியில் நடை பெற்றது. வங்கி ஓய்வூதியர் சங் கங்களின் கூட்டமைப்பின் தலை வர்கள் தாமஸ்பிராங்கே, சரவண முத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட் டத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த பி.ஆர்.நட ராஜன் கூறுகையில், 40 ஆண்டுக ளுக்கு மேலாக வங்கியின் மேம்பாட் டிற்காக உழைத்த ஓய்வுபெற்ற மேலும், வங்கி ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் வலியுறுத்து வேன் என்றார். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் சாதாரண ஏழை எளிய மக்களை ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் வெளியேற்றும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. நக ரத்தை சுற்றியே அவர்களது பணி யிடம் இருப்பதால், நகரத்திற்குள் ஏராளமான அரசுக்குச் சொந்த மான காலியிடங்கள் உள்ளது. அவ்விடத்தில் இம்மக்களை குடிய மர்த்த தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் பதிவேட்டில் இந்தி இருப்பது, கண்டனத்திற்குரியது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. மும்மொழி கொள்கையை மாநில அரசு கடுமையாக எதிர்க்க வேண் டும் என்றார். முடிவில் வங்கி ஓய்வூதியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பா ளர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து வங்கி ஓய்வூ தியர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.