tamilnadu

img

சேலம் உருக்காலையை பாதுகாக்க தமிழக அரசு தலையீடு செய்திடுக

சேலம், ஆக. 22-                      சேலம் உருக்காலையை பாது காக்க தமிழக அரசு தலையீடு செய்யவேண்டும் எனவும், மத்திய பாஜக அரசு உருக்காலையை தனி யாருக்கு விற்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாட்ட ஆட்சியர்  அலுவல கம் முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் வியாழனன்று நடை பெற்றது.                  தமிழகத்தில் உள்ள மிக பெரிய பொதுத்துறை நிறுவனங்க ளில் ஒன்றான சேலம்  உருக்கா லையை தனியார் மயமாக்கும் நட வடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. இதன்படி செயில் நிர்வாகம், சேலம் உருக்காலை உள்பட 3 உருக்காலைகளை விற்க உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதனி டையே சேலம் உருக்காலை தனி யார் மயத்தை கண்டித்தும், உல களாவிய ஒப்பந்தத்தை திரும்ப  பெறக்கோரியும் சேலம் உருக் காலை தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் உருக் காலையை வாங்க விரும்பும் தனியார் நிறுவனத்தினர், உருக் காலையை பார்வையிட வரவுள் ளனர். இது தொடர்பான தகவல் களை யாருக்கும் தெரிவிக்க இயலாது என தொழிற்சங்க நிர் வாகிகளிடம் செயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், உருக்காலையை பார்வையிட தனியார் துறையினர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், அதனை தடுப்பதற்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆலையின் நுழைவு வாயில் முன்பு மத்திய தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் உருக் காலை தனியார் மயத்தை மத் திய அரசு கைவிட வேண்டும். உல களாவிய ஒப்பந்தத்தை ரத்து  செய்ய வேண்டும். இதில் தமிழக அரச உடனே தலையிட வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் திற்கு ஐஎன்டியுசி மாவட்ட தலை வர் டி.வடமலை, தொமுச சேலம் மாவட்ட கவுன்சில் பொன்னி இரா.பழனியப்பன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதய குமார், தலைவர் பி.பன்னீர்செல் வம், ஏஐடியுசி செயலாளர் எ.விம லன், எச்எம்எஸ் செயலாளர் சி.கோவிந்தன், ஏஐசிசிடியு செய லாளர் டி.விஸ்வநாதன் ஆகி யோர் தலைமை தாங்கினர்.  உண்ணாவிரதப்    போராட்டத்தை சிஐடியு மாநில பொதுச்செயலா ளர் ஜி.சுகுமாரன் துவக்கிவைத் தார்.  இதில் அகில இந்திய தொமுக பேரவை மாநில பொருளாளர் கி.நடராஜன், ஏஐடியுசி மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, ஐஎன்டியுசி மாநில துணைத்தலை வர் எம்.பன்னீர்செல்வம், எச்எம் எஸ் மாநில செயலாளர் சி.கோவிந் தன், ஏஐசிசிடியு மாநில செயலா ளர் எம்.ஜெயபிரகாஷ் நாராய ணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். 

மேலும் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, சிபிஐ மாவட்டச் செய லாளர் எ.மோகன், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் இரா.இரா ஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீர பாண்டிராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்,  மாநகர காங்கிரஸ் பொருளாளர் ஏ.ஆர்.பி.பாஸ்கர்,  பாமக மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அருள், மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம், அமமுக கழக அமைப்பு செயலாளர் எஸ்.கே.செல்வம், மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.இ.வெங்கடாச் சலம், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.மாதேஸ், மதிமுக மத்திய மாவட்ட செயலா ளர் எ.ஆனந்தராஜ், அவைத் தலைவர் லிபியா சந்திரசேகரன் மற்றும் தொழிலாளர் குடும்பத்தி னர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.