tamilnadu

பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஎம் மனு

சேலம், அக்.8- சேலம் அருகே இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்முறை செய்த தோடு, அதனை வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ் மற்றும் அவ ருடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகில் உள்ள வேம்படிதாளம் செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ் என் பவர் ஆட்டோவில் பயணிக்கும் பெண் களை பாலியல் வல்லுறவு செய்து, அதனை ரகசியமாக வீடியோ படம் எடுத்து தொடர்ந்து மிரட்டி வந்துள் ளார். மேலும், இவர் மட்டுமின்றி தனது நண்பர்கள் மற்றும் சில அதிகாரிக ளோடு சேர்ந்து பெண்களை கூட்டு  பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ள தாக கூறப்படுகிறது. இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாணவி கள் தங்களது குடும்ப நற்பெயரும், எதிர்காலமும் வீணாகி விடும் என பயந்து வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர்.  இந்நிலையில், இக்கொடூர சம்ப வங்களில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டு னர் மோகன்ராஜ் வேறு ஒரு வழக் கில் கைது செய்து சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். அதேநேரம், இவரு டன் கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தகவ லும், விசாரணையும் நடந்ததாக தெரிய வில்லை.  எனவே, இவர் மீது போக்சோ சட் டத்தின்படி வழக்குப் பதிவு செய்து நட வடிக்கை மேற்கொள்வதோடு, சம் பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய விசாரணை செய்து, கடும் சட்டப் பிரிவின்படி வழக்கு தொடுத்து நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண் டும். இக்கும்பலால் சீரழிக்கப்பட்ட பெண்கள் குறித்து சமூக வலைதளங் களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆபாச வீடியோக்களை அகற்றிட நடவ டிக்கை எடுக்க வேண்டுமென என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இம்மனுவினை அளிக் கையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, எம்.குணசேகரன், சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனி ருந்தனர்.