நாமக்கல், செப்.27- குமாரபாளையம் அருகே கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விசைத்தறி தொழிலாளியின் குடும்பத்தினரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி ராஜூ. இவரது மனைவி விசாலாட்சி. இவர் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் குமாரபாளையத்தில் இயங்கி வரும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற் றுள்ளார். இந்த கடனுக்கு 30 சதவிகித வட்டி வசூலிக்கப் பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடன் தொகை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் ராஜூ மற்றும் அவரது மனைவியை தரக்குறைவாக பேசி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் பெரும் மன உளைச்ச லுக்குள்ளான ராஜூ வியாழனன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று இவரது குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, குமாரபாளையம் நகரச் செய லாளர் இ.பி.ஆறுமுகம், நகரக் குழு உறுப்பினர் எஸ்.சக்தி வேல் மற்றும் சண்முகம், வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதன்பின்னர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், குமாரபாளையம் உள்ளிட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் கந்துவட்டி தொழிலை முழுவதுமாக தடை செய்ய உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, விசைத்தறி தொழி லாளர்களை மையப்படுத்தி கடன் தருவது, அவர்களை கடன் வலையில் சிக்க வைத்து அதிக வட்டியை வசூல் செய்வது போன்ற முறையில் செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் என பல்வேறு பெயர்களில் செயல்படும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நடைபெறும் கந்துவட்டி புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக தலையீடு செய்து உரிய நடவ டிக்கையில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.