தருமபுரி, ஜூலை 2- நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தில் பெட்ரோலிய சுத்திக ரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வாகனத்தை சிறைபிடித்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி வட்டத்திற்குட்பட்டது சிவாடி கிராமம். இங்குள்ளவர் களில் 80 சதமானோர் தலித் சமூகத்தினராவார்கள். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத் தில் பல தலைமுறைகளாக சாகு படி செய்து வருகின்றனர். நஞ்சையும், புஞ்சையும் கலந்த இந்நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை உள்ளிட்ட இதர மரங்கள் உள்ளன. மின் மோட்டார் பொருத்திய கிண றுகள் மற்றும் ஏராளமான குடி யிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதி யில்தான் இந்துஸ்தான் பெட்ரோ லியம் கார்ப்பரேசன் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. விஜயவாடாவிலிருந்து பெட் ரோலியம் எண்ணெய்யை கிருஷ் ணகிரி மாவட்டம் வழியாக 697 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவாடி கிராமத்திற்குக் கொண்டு வந்து சுத்திகரிக்க புல எண் 161லிருந்து 293 வரை நிலங் களைக் கையகப்படுத்த நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்கு ரூ.1813 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்நிலம் 150 க்கும் மேற் பட்ட குடும்பங்களுக்கு சொந்த மானது. இந்த முடிவுக்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வருவாய் துறை மூலம் நடைபெற்ற விவ சாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் நிலத்தை கையகப் படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களது எதிர்ப்பினை எழுத்துப் பூர்வமாகவும் பதிவு செய்தனர். இந்நிலையில், அவ்விவசாயிக ளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தொடர் போராட் டங்களை நடத்தி வருகிறது. இதற்கிடையில் செவ்வா யன்று இந்துஸ்தான் பெட்ரோ லியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் சிவாடி கிராமத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப் பதற்கான உபகரணங்களை கனரக வாகனங்கள் மூலம் கொண்டு வந்தது. இதனை அறிந்த விவசாயிகள் கனரக வாகனங்களைச் சிறை பிடித்த னர். இத்தகவல் அறிந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பா ளர் ராஜ்குமார், அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் ராஜேஸ் மற்றும் 50க்கும் மேற் பட்ட அதிரடிப்படை காவலர் கள், வஜ்ரா வாகனத்துடன் வந்தனர். அங்கு சிவாடி மக்களிடையே காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது இந்துதாஸ்தான் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை கைது செய்யச்சொல்லி மேலிடத் தில் இருந்து உத்தரவு வந்திருக் கிறது. எனவே அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என ராஜ்குமார் கூறினார். இதனால் சிவாடி மக்கள் ஆவேசமடைந்து, எங்கள் நிலத்தை உயிரே போனா லும் கொடுக்க மாட்டோம் என்ற னர். இதனையடுத்து இயந்திரங் கள் ஏற்றி வந்த இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் ஊழியர்கள், இயந்திரங்களை இறக்காமல் திரும்பிச் சென்றனர்.