பொள்ளாச்சி, அக்.22- பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை பாலியல் துண்புறுத்தல் செய்த வழக்கில் கணவன், மனைவி ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை சாலை பிஏபி வளாக கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி யின் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் ஐயம்மாள். இவரது கணவர் தங்கவேல் (60), தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் மெக்கானிக்காக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஆறு மாதத் திற்கு முன்பு தனது மனைவி பணியாற்றும் பள்ளி யில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை யறிந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஐயம்மாள், சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, அம்மாணவி வேறு பள்ளிக்கு மாறியுள்ளார். இந்நிலையில், அண்மையில் அம்மாணவி இக் கொடூரத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இத னால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் செவ்வாயன்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் புதனன்று தங்கவேல் மற்றும் தலைமை ஆசிரியர் ஐயம்மாள் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.