தருமபுரி, ஆக.11- கோடியூர் -அதியமான்கோட்டை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சிக்குட்பட்டது கோடியூர் கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கோடியூரி லிருந்து வெங்கட்டம்பட்டி, தேங்காமரத்துப்பட்டி வழியாக அதிமான்கோட்டை வரை செல்லும் 6 கிலோமீட்டர் சாலை பழுதடைந்துள்ளது. கோடியூரிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அதியமான் கோட்டையில் உள்ள அரசுப்பள்ளிக்கு மிதிவண்டியிலும், நடந்தும் சென்று வருகின்றனர்.மேலும் இக்கிராமத்தில் உள்ளவர்கள் கூலிவேலைக்கு சென்றுவர இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை பழுதடைந்து நீண்ட காலம் பாரமரிப்பின்றி உள்ளது. தற்போது அடிக்கடி மழைபெய்து வருவதால் சேறும், சகதியுமாக உள்ளது. இதில் நடந்து செல்வோரும் வாகனத்தில் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்ற னர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத் தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே,மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பழுதடைந்த சாலையை சீர மைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ள னர்.