கோவை, மே 25-தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் மாதம் வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவர்களிடம் இருந்து பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 40-வது வருடாந்திர பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரையிலான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவர்களிடம் இருந்துபட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விவரங்களைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணையதளமான றறற.வயேர.யஉ.in மூலம் மே 29-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துவிண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை பல்கலைக்கழக இணையதளத்தின் (கூhந ஊடிவேசடிடடநச,கூசூஹரு, ஊடிiஅயெவடிசந) மூலம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தற்காலிகபட்டப்படிப்பு சான்றிதழின் நகல், இறுதி பருவ மதிப்பெண் சான்றிதழின் நகல், இணையதளம் மூலமாக வங்கியில் செலுத்தப்பட்ட கட்டணத்திற்கான இரசீதுமற்றும் சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்கள் இணைத்திருக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜுலை 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.மேலும், இது சம்பந்தமான விவரங்கள் அறிய விரும்புவோர் 0422-6611506 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.