tamilnadu

img

தூய்மைக் காவலர்களுக்கான ஊதிய அரசாணையை வெளியிடுக

சிஐடியு ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் முறையீடு

ஈரோடு, மே 27-      கிராம ஊராட்சிகளில் தூய் மைக் காவலர்களுக்கு சம்பள நிர் ணயம் மற்றும் அகவிலைப்படி வழங்குமாறு சிஐடியு வலியுறுத் தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற் றால் அரசு அறிவித்த ஊரடங்கு நான்காவது கட்டத்தைக் கடந்து மேலும் தொடர உள்ள நிலையில், ஊராட்சிகளில் பணிபுரியும் தூய் மைப் பணியாளர்கள், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குப வர்கள் ஆகியோர் கொரோனா தொற்று பரவல் காலத்தில் மட்டு மல்லாது எல்லா காலங்களிலும் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றி வருகிற பணியாளர்களின் ஊதியம் என் பது மிகக் குறைவானதாகும். மிகக் குறைந்த ஊதியத்திலும் கூட சமமற்ற போக்கு நிலவுகிறது. சமமற்ற போக்கு என்பது ஒன்றி யங்களில் மட்டுமல்லாது, ஒரு ஒன் றியத்திற்குள் இருக்கும் ஊராட் சிகளிலும் இது நிலவுகிறது. எனவே, இவர்களது ஊதியம் முறைப்படுத்தப்பட வேண்டும். வாழ்நிலைக்கேற்ப ஊதியம் நிர் ணயம் செய்திட வேண்டும் என்ப தால் மாநிலம் முழுவதும் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். 2010க்குப் பிறகும் பணியில் சேர்ந்த மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை  பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதிய வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என  தொடர்ந்து வலியுறுத்தப்பட் டது.               இதற்கிடையில் மாநில அரசு 8-வது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்றியபோது தூய்மை பணியாளர்கள், மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரும் சிறப்பு கால முறை ஊதியத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். ஆனால் இந்த ஊதிய உயர்வானது அனைத்து ஒன்றியங்களிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

அத்துடன் சிறப்பு காலமுறை ஊதியம் என்ற ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்ட பிறகு அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வும் முழுமையாக நிறை வேற்றப் படவில்லை. எனவே, இந்த ஊழியர்களுக்கான ஊதியம் என்பது சமமற்ற போக்கில் நில வுகிறது. இந்நிலையில், கடந்த பிப் 16 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குப வர்களுக்கு அடிப்படை ஊதியம் என்பது ரூ.4ஆயிரம் என்றும், தூய் மைக் காவலர்களுக்கு ரூ.3600 எனவும் உயர்த்தி அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பின்படி நாளது தேதிவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எனவே, சட்டமன்றத்தில் அறி வித்தபடி ஊதிய உயர்வுக்கான அரசாணையை உடனடியாக தமி ழக அரசு வெளியிட வேண்டும். மேலும் அரசு அறிவிப்பின்படி ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கிட ஆவண செய்திட வேண் டும் என சிஐடியு ஊரக உள்ளாட்சி  துறை ஊழியர் சங்கத்தின் ஈரோடு  மாவட்டதலைவர் எஸ்சுப்ரமணி யன், செயலாளர் எஸ்.மாணிக் கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர்.

அவிநாசி

அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தியிடம்,  சிஐ டியு ஊரக வளர்ச்சித்துறை உள் ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. பழனிச்சாமி,  மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், ஒன்றிய கவுன்சிலர் பி. முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகி கள் மனு அளித்தனர்.