tamilnadu

img

நோய் எதிர்ப்பாற்றல் மருந்து விநியோகம் வாலிபர் சங்க முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

கோவை, ஜூன் 14– கோவை மாவட்ட ஹோமி யோபதி மருத்துவர்கள் சங்கத்து டன் இணைந்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் ஞாயி றன்று பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் சக்தியை அதிகரிக் கும் வகையிலான மருந்துகளை வழங்கினர்.

கொரோனா நோய் தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகி றது. இந்தியாவிலும், தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற் படுத்தியுள்ளது. இந்நோய்க்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. உடலில் நோய்எதிர்ப்பாற்றல் இருப்பவர் களை கொரோனா நோய்த்தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத் தாது என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இத னைத்தொடர்ந்து கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளை அருந்த மத் திய, மாநில அரசுகள் பரிந்துரைத்து வருகிறது.  இதன் ஒருபகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், கோவை மாவட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கமும் இணைந்து நோய் எதிர்ப்பாற்றல் மருந்தினை ஞாயிறன்று கோவையில் பல்வேறு இடங்களில் வழங்கினர்.

கோவை இரத்தினபுரியில் நடைபெற்ற இம்முகாமினை வாலி பர் சங்க முன்னாள் தலைவர் என்.ஆர்.முருகேசன் துவக்கி வைத்தார். இதில், மாவட்டத் தலைவர் ஸ்டா லின் குமார்,  மாவட்டச்செயலாளர் கே.எஸ்.கனகராஜ், வடக்குநகர தலைவர் நிசார் அகமது, பொரு ளாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் இம்முகாம் நடை பெற்றது. இதில், ஏராளமான பொது மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து இம்முகாமில் பங் கேற்று  மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச ஹோமியோ பதி மருந்துகளை பெற்று சென்ற னர். உரிய நேரத்தில் இதுபோன்ற முகாமை ஏற்பாடு செய்த வாலிபர் சங்கத்தினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.