சேலம், ஜூன் 28- சேலம் மாவட்ட ஆட்சி யராக பணியாற்றி வரும் ரோகினி தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல் கலைக்கழக பதிவாளராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் சி.அ.ராமன் தற்போது சேலம் மாவட்ட ஆட்சிய ராக நியமிப்கப்பட்டுள் ளார். இவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழ கத்தில் பொதுமேலாளர் (நிர்வாகம்), ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் முதல மைச்சர் அலுவலகத்தில் துணை செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு இந் திய ஆட்சிப்பணியில் நிய மனம் செய்யப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்தில் சென்னை நில நிர்வாக இணை ஆணையராகப் பணியாற்றிய வர். பின்னர் 31.07.2016 முதல் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி வரும்நிலையில், தற்போது சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.