கோவை, நவ. 23- கோவை மாவட்ட தேசிய மாணவர்படை மாண வர்களுக்கு ஆண்டு இறுதி பயிற்சி முகாம் பிஎஸ்ஜி கல் லூரியில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை யூனிட் 2 கமான்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல் கிரிஸ் பர்தான் தலைமையில் நவ.21 ஆம் தேதியன்று துவங்கிய இப்பயிற்சி முகாம் நவ.30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கோவை அரசு கல்லூரி, பிஎஸ்ஜி கலை கல்லூரி, பிஷப் அப்பாசாமி கல்லூரி மற்றும் புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி, ஒண்டிபுதூர் அரசு மேல் நிலைப்பள்ளி, தேவாங்கா மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கே.கே.நாயுடு மேல் நிலைப்பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.வி.எம் பள்ளி ஆகியவற்றை சார்ந்த தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் சுமார் 500 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இம்மாணவர்களுக்கு ராணுவ வீரர்களான ராம் வக் கில் யாதவ், மூர்த்தி, பல்வான் சிங், மணிகண்டன், ராம்ஜி, பாண்டியன் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் களான ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முன்னதாக, சனியன்று நடைபெற்ற பயிற்சி முகாமில் அணிவகுப்பு பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, பேரிடர் மேலான்மை குறித்த பயிற்சி, முதலுதவி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.