tamilnadu

img

மதுபானம் வாங்க பணம் தராததால் தாய், தந்தை வெட்டிக்கொலை மகன் வெறிச்செயல்- பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை, பிப். 8–  மது அருந்த பணம் தராத வயது முதிர்ந்த தாய், தந்தையை  வெட்டிக் கொலை செய்துவிட்டு மகன் தலைமறைவான சம் பவம் அப்பகுதி பொதுமக் களிடையே பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை ஆலந்துரை, இந்திரா காலனி, விராலி யூர் வெள்ளமலை பட்டினம் பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரம் (75), இவருடைய மனைவி துளசி  (70,) கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்தி என்ற (31) மகனும் மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான கார்த்திக் அடிக்கடி தாய், தந்தையிடம் வந்து மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்வது வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.  இந்நிலையில் வெள்ளியன்று இதே போல தாய், தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் தர மறுக்கவே திரும்பிச்சென்ற கார்த்திக் சனி யன்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய், தந்தையரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். கார்த்திக்கிற்கு புவனேஸ்வரி என்ற ஒரு மனைவியும் ஒரு மகனும் உள்ள னர். அதிகாலை விடிந்தும் கதவு திறக்கப்படா ததால் அக்கம் பக்கத்தினர் காவல் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைய டுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவைத் திறந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மகனை தேடி வருகின்ற னர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக் களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது.