அவிநாசி, ஆக.1- அவிநாசி அடுத்த சேவூரில் உள்ள குளத்தில் கோழி கழிவுகள் கொட் டப்படுவதால் நீர் நிலைகள் மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள்குற்றம்சாட்டு கின்றனர். அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சி குளத்தில் கோழி கழிவுகள் மற்றும் பனியன் கழிவுகள் உள் ளிட்ட பல்வேறு குப்பை களை கொட்டப்படு கின்றன. இதனால் நீர் நிலைகள் மாசுபடுவதுடன், அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, கழிவுகளை கொட்டு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சேவூர் ஊராட்சி செயலாள ரிடம் கேட்டபோது, குளங்களில் குப்பை கொட்டாதீர்கள் என்று சில தினங்களுக்கு முன்பு தான் பொதுமக்களும், வணிக நிறுவ னங்களுக்கும் அறிவுரை வழங்கி நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இருப் பினும் தொடர்ந்து குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் வருகின்றன. இனிவரும் காலங்களில் குளத்தில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என அவர் தெரி வித்தார்.