tamilnadu

img

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் பிரச்சார இயக்கம்`

தருமபுரி, அக். 2- மத்திய பாஜக அரசின் மக்கள், தொழி லாளர் விரோத போக்கைகக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் 10 மையங்களில் பிரச்சாரம் இயக்கம் நடத்துவதென ஆலோசனைக் கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டம் தரு மபுரியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ்.தேவராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.  மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சோ.அர்ச்சுனன், எம்.முத்து, எஸ்.கிரை ஸாமேரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர்கள் எம்.மாதேஸ்வரன், மாது, சிபிஎம் நகர செயலாளர் இரா.ஜோதி பாசு, நகரகுழு உறுப்பினர் வி.பி.சாமி நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.  இதில் மத்திய பாஜ அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து நாடு  தழுவிய அளவில்  பிரச்சாரம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடத்துவது என்று இடதுசாரி கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அந்த அடிப் படையில் வருகிற அக். 14ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதிகளில் தருமபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், காரிமங்கலம்,  பாலக்கோடு, கம்பைநல்லூர், அரூர், பென்னாகரம், பாப் பாரப்பட்டி, ஏரியூர் ஆகிய 10 மையங்களில் பிரச்சார இயக்கம் நடத்தவும், அக்டோபர் 16 ஆம் தேதியன்று தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.  இந்த பிரச்சார இயக்கங்களில் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிபிஐ(எம்எல்) ஆகிய கட்சி கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப் பட்டது.