வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம்
கோவை, நவ.22- தமிழ் தெரியாதவர்களும் தமிழகத் தில் நீதிபதியாகலாம் என அறிவிக்கப் பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளி யன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர் வாணையம் மூலம் நடத்தப்படும் கீழமை நீதிமன்ற நீதிபதி பணியிட தேர் விற்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப் பிக்கலாம், தேர்வெழுதலாம் என்ற புதிய நடைமுறையை தேர்வாணையம் அறி வித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை கண்டித்தும், அதனை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என வலியு றுத்தியும் வெள்ளியன்று தமிழகம் முழு வதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன்ஒருபகுதியாக, கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவை ஒருங் கிணைந்த நீதிமன்ற நுழை வாயில் முன்பு கூட்டுக்குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராள மான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
கோபி
இதேபோல், கோபிசெட்டிபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கோபிசெட்டிபாளையம் வழக் கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இரத் தினசாமி தலைமையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க செயலாளர் சத்தியசீலன், துணைத் தலை வர் ராமசாமி, இணைச் செயலாளர் மோகன் மங்கையகரசி, மூத்த வழக்கறிஞர்கள் ரத்தினசபாபதி, செல்வக்குமார் உட்பட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.