கோவை, மார்ச் 12- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை யின் சார்பில் ‘ஊட்டச்சத்து இருவார நிகழ்வு -2020” குறித்த விழிப்புணர்வு வாகனத்தை வியாழனன்று மாவட்ட ஆட்சி யர் கு.ராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித் துள்ளதாவது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்புக் குறித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போஷான் அபியான் திட்டத்தின் கீழ், 2022க்குள் ஊட்டச்சத்துக் குறை பாடு இல்லாத நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்ஒருபகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சியான போஷன் பக்வாடா (மார்ச் 8 முதல் 22 வரை) இருவார நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதை உறுதி செய்தல், தடுப்பூசி வழங் குதல், ஆறு மாத குழந்தைகளுக்கு துணை உணவு வழங்கு தல், தன் சுத்தம் பேணுதல், இரத்த சோகை தடுத்தல், ஒவ்வொரு மாதமும் எடை மற்றும் உயரம் எடுத்தல், கருவுற்ற பெண் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை உறுதி செய்தல் போன்ற நோக்கங்களை மையமாக கொண்டு இவ்விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.